என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
முன்னாள் எம்.பி. ராமதாஸ் புதுக்கட்சி தொடங்கினார்
- 2-வது விடுதலை பெற வேண்டிய நிலையில் உள்ளோம்.
- புதுவை மக்களுக்கு இந்த 2 வித விடுதலையை பெற்றுத் தருவதுதான் புதிய கட்சியின் நோக்கம்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் புதுவை மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
இதன் தொடக்கவிழா புதுவையின் விடுதலைக்கு வாக்கெடுப்பு நடந்த கீழூரில் நடந்தது. முன்னாள் எம்.பி. ராமதாஸ் தலைமை வகித்தார். வெங்கட்ராமன் வரவேற்றார்.
தாகூர் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜவன், முதன்மை பொறியாளர் ரவி, பேராசிரியை செல்வகுமாரி, எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி ரகோத்தமன் வாழ்த்தி பேசினர்.
முன்னாள் எம்.பி. ராமதாஸ் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-
புதுவைக்கு 2-வது விடுதலை பெற வேண்டிய நிலையில் உள்ளோம்.
மத்திய அரசிடமிருந்தும், மாநில அரசிடமிருந்தும் விடுதலை கிடைக்க வேண்டியுள்ளது. மாநில அந்தஸ்து கிடைக்கும்போது தான் மத்தியிலிருந்து விடுதலை கிடைக்கும்.
சமூகநீதியோடு கூடிய விரைவான வளர்ச்சியை உருவாக்கி பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியில் வாழும் போதுதான் புதுவை அரசிலிருந்து விடுதலை கிடைக்கும். புதுவை மக்களுக்கு இந்த 2 வித விடுதலையை பெற்றுத் தருவதுதான் புதிய கட்சியின் நோக்கம்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
சிவராந்தகம் கிராம பஞ்சாயத்து தலைவர் பரந்தாமன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்