search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சென்னை- கடலூர் ரெயில் பாதை திட்டம் நிறைவேறாது-முன்னாள் எம்.பி. ராமதாஸ் அறிக்கை
    X

    கோப்பு படம்.

    சென்னை- கடலூர் ரெயில் பாதை திட்டம் நிறைவேறாது-முன்னாள் எம்.பி. ராமதாஸ் அறிக்கை

    • ரெயில்வே திட்டம் கவர்னர் வேண்டுகோளை ஏற்று, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது சரியில்லாத கூற்று.
    • புதுவை அரசு தன் நிலைப்பாடை எழுத்துப்பூர்வமாக தென்னகரெயில்வேக்கு கடிதம் அனுப்பினால்தான் திட்டம் உயிர்பெறும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    சென்னையிலிருந்து புதுவை வழியாக கடலூருக்கு ரெயில்வே திட்டம் கவர்னர் வேண்டுகோளை ஏற்று, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது சரியில்லாத கூற்று.

    புதுவை எம்.பி.யாக நான் இருந்தபோது மத்திய ரெயில்வே அமைச்சர்களாக இருந்த லல்லுபிரசாத்யாதவ், வேலு ஆகியோரிடம் கூறி திட்டத்திற்கு அனுமதி பெற்றேன்.

    2007-ல் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்து வந்த ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் நடந்தது. புதுவை அரசின் செயல்பாட்டால் இத்திட்டம் கிடப் பில் போடப்பட்டது. மத்திய அரசு இந்த ஆண்டும் ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளது.

    புதுவை அரசு தன் நிலைப்பாடை எழுத்துப்பூர்வமாக தென்னகரெயில்வேக்கு கடிதம் அனுப்பினால்தான் திட்டம் உயிர்பெறும். புதுவையில் உள்ள சில செல்வந்தர்களை திருப்திப்படுத்த அரசா ங்கம் நினைத்தால் இத்திட்டம் செயல்படாது. சிக்கல்களை கவர்னர் தீர்த்தால் திட்டத்திற்கு வழி பிறக்கும். இத்திட்டம் அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி. இது மக்களுக்கு பயன்படும் வகையில் கவர்னர் செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×