search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorcycles accident"

    • முக்கூடலை அடுத்த ரஸ்தாவூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்ற பிரின்ஸ் (வயது 22). அதே பகுதியை சேர்ந்த மகாராஜன் (18), முத்தரசன் (20) ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவர்.
    • நேற்று இரவு முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி விலக்கு வரையில் பிரின்ஸ் மற்றும் முத்தரசன் ஆகிய 2 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த ரஸ்தாவூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் பிரேம்குமார் என்ற பிரின்ஸ் (வயது 22). அதே பகுதி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அரி செல்வம் மகன் மகாராஜன் (18), தியாகராஜர் தெருவை சேர்ந்த சேகர் மகன் முத்தரசன் (20). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

    பைக் ரேஸ்

    நேற்று இரவு முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி விலக்கு வரையில் பிரின்ஸ் மற்றும் முத்தரசன் ஆகிய 2 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பிரின்ஸ் மோட்டார் சைக்கிளில் பின்னால் மகாராஜன் அமர்ந்துள்ளார். அவர்கள் சேரன்மகா தேவி விலக்கு பகுதிக்கு சென்று விட்டு அங்கிருந்து முக்கூடலை நோக்கி மீண்டும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம் பொட்டல் காலனி பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே மருந்து விற்பனை பிரதிநிதிகளான களக்காடு சிங்கம்பத்து பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா (42), டவுன் பாரதியார் தெருவை சேர்ந்த பொன்ராஜ் (42) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    வாலிபர் பலி

    அப்போது அவர்கள் மீது பிரின்ஸ் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த முத்தரசன் மோட்டார் சைக்கிளும் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மகாராஜன் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சதக்கத்துல்லா, பொன்ராஜ், பிரின்ஸ், முத்தரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த முக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 4 பேரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மகாராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தைப்பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 60).
    • துரை ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த மகாலிங்கம் (21) என்பவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தைப்பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 60). இவர் நேற்று மாலை அம்பை ஸ்டேட் பேங்க் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரது மோட்டார் சைக்கிள், எதிரே வந்த ஊர்க்காட்டை சேர்ந்த மகாலிங்கம் (21) என்பவரது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பலத்த காயமடைந்த துரை மற்றும் மகாலிங்கம் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×