என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mother escaped
நீங்கள் தேடியது "mother escaped"
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பிறந்து ஒரு வாரமே ஆனு குழந்தையை கொடுத்துவிட்டு தாய் தப்பி ஓடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மரவள்ளிக் கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு 7 மணி அளவில் பஸ் நிலையத்தில் அவர் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்த போது இளம் பெண் பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தையுடன் அங்கு வந்தார்.
அவர் கோவிந்தம்மாளிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் கழிவறைக்கு செல்வதால் குழந்தையை கவனிக்கும்படி கூறி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தையை விட்டுச் சென்ற பெண் யார்? தவறான முறையில் பிறந்த குழந்தையா? அல்லது கடத்தப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மரவள்ளிக் கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு 7 மணி அளவில் பஸ் நிலையத்தில் அவர் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்த போது இளம் பெண் பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தையுடன் அங்கு வந்தார்.
அவர் கோவிந்தம்மாளிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் கழிவறைக்கு செல்வதால் குழந்தையை கவனிக்கும்படி கூறி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தையை விட்டுச் சென்ற பெண் யார்? தவறான முறையில் பிறந்த குழந்தையா? அல்லது கடத்தப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அருகே 2 குழந்தைகள் மர்மமாக உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாயாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா(வயது 27). இவர்களுக்கு மிதுன் (4) என்ற மகனும், லட்சன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லட்சன் வீட்டில் இருந்த அண்டாவில் இருந்த தண்ணீரில் பிணமாக கிடந்தான். அப்போது தாய் ஜெயசித்ரா தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரை போலீசார் பிடித்த போது, குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்தது என்று கூறினார். இதை நம்பிய போலீசார் அவரை விட்டு விட்டனர்.
இந்த சோக சம்பவத்திற்கு பிறகு சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மகன் மிதுனுடன் விழுப்புரம் மாவட்டம் பனங்குப்பத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தார். கடந்த 1-ந்தேதி சிலம்பரசன் வேலைக்கு சென்றார். வீட்டில் ஜெயசித்ராவும், மிதுனும் இருந்தனர்.
அப்போது வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் மிதுனும் பிணமாக மிதந்தான். இதையடுத்து ஜெயசித்ரா தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து சிலம்பரசன் வளவனூர் போலீசில் புகார் செய்தார். அதில் எனது 2 குழந்தைகளின் சாவில் ஜெயசித்ரா மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி ஜெயசித்ரா கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.
இந்த 2 சம்பவங்களும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தது. எனவே 2 மாவட்ட போலீசாரும் தலைமறைவாக உள்ள ஜெயசித்ராவை பிடிக்க தனிப்படை அமைத்தனர். அவர்கள் ஜெயசித்ராவை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவரின் உறவினர்களை பிடித்து விசாரித்தனர். ஜெயசித்ராவின் செல்போன் நம்பரை ஆய்வு செய்து, அவர் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். ஆனால் ஜெயசித்ரா எங்கு இருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மேல்மருவத்தூர் அருகே ஒரு பகுதியில் ஜெயசித்ரா பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த ஜெயசித்ராவை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை வளவனூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து ஜெயசித்ரா, அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்களை வளவனூர் அருகே உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் குழந்தைகள் இறந்த விவரம் தெரிய வரும்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா(வயது 27). இவர்களுக்கு மிதுன் (4) என்ற மகனும், லட்சன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லட்சன் வீட்டில் இருந்த அண்டாவில் இருந்த தண்ணீரில் பிணமாக கிடந்தான். அப்போது தாய் ஜெயசித்ரா தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரை போலீசார் பிடித்த போது, குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்தது என்று கூறினார். இதை நம்பிய போலீசார் அவரை விட்டு விட்டனர்.
இந்த சோக சம்பவத்திற்கு பிறகு சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மகன் மிதுனுடன் விழுப்புரம் மாவட்டம் பனங்குப்பத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தார். கடந்த 1-ந்தேதி சிலம்பரசன் வேலைக்கு சென்றார். வீட்டில் ஜெயசித்ராவும், மிதுனும் இருந்தனர்.
அப்போது வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் மிதுனும் பிணமாக மிதந்தான். இதையடுத்து ஜெயசித்ரா தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து சிலம்பரசன் வளவனூர் போலீசில் புகார் செய்தார். அதில் எனது 2 குழந்தைகளின் சாவில் ஜெயசித்ரா மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி ஜெயசித்ரா கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.
இந்த 2 சம்பவங்களும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தது. எனவே 2 மாவட்ட போலீசாரும் தலைமறைவாக உள்ள ஜெயசித்ராவை பிடிக்க தனிப்படை அமைத்தனர். அவர்கள் ஜெயசித்ராவை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவரின் உறவினர்களை பிடித்து விசாரித்தனர். ஜெயசித்ராவின் செல்போன் நம்பரை ஆய்வு செய்து, அவர் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். ஆனால் ஜெயசித்ரா எங்கு இருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மேல்மருவத்தூர் அருகே ஒரு பகுதியில் ஜெயசித்ரா பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த ஜெயசித்ராவை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை வளவனூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து ஜெயசித்ரா, அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்களை வளவனூர் அருகே உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் குழந்தைகள் இறந்த விவரம் தெரிய வரும்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 குழந்தைகள் சாவில் உள்ள மர்மம் தொடர்பாக தலைமறைவாக உள்ள தாயை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா(வயது 27). இவர்களுக்கு மிதுன் (4) என்ற மகனும், லட்சன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லட்சன் வீட்டில் இருந்து அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி இறந்தான். அப்போது தாய் ஜெயசித்ரா தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரை போலீசார் பிடித்த போது, குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்தது என்று தெரிவித்தார். இதனால் போலீசார் அவரை விட்டு விட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மகன் மிதுனுடன் விழுப்புரம் மாவட்டம் பனங்குப்பத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தார். அதே கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மிதுன் யூ.கே.ஜி. படித்து வந்தான்.
நேற்று சிலம்பரசன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஜெயசித்ராவும், மிதுனும் இருந்தனர். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் மிதுன் பிணமாக மிதந்தான். இதையடுத்து ஜெயசித்ரா தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து சிலம்பரசன் வளவனூர் போலீசில் புகார் செய்தார். அதில் எனது 2 குழந்தைகளின் சாவில் ஜெயசித்ரா மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி ஜெயசித்ரா கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.
இந்த 2 சம்பவங்களும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. எனவே 2 மாவட்ட போலீசாரும் தலைமறைவாக உள்ள ஜெயசித்ராவை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயசித்ராவின் செல்போன் நம்பரை ஆய்வு செய்து, அவர் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகம் படும்படியாக யாராவது இருந்தார்களா? என்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை சோதனை செய்து வருகின்றனர். ஜெயசித்ராவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினால் தான் 2 குழந்தைகள் எப்படி இறந்தது என்று தெரிய வரும்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா(வயது 27). இவர்களுக்கு மிதுன் (4) என்ற மகனும், லட்சன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லட்சன் வீட்டில் இருந்து அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி இறந்தான். அப்போது தாய் ஜெயசித்ரா தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரை போலீசார் பிடித்த போது, குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்தது என்று தெரிவித்தார். இதனால் போலீசார் அவரை விட்டு விட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மகன் மிதுனுடன் விழுப்புரம் மாவட்டம் பனங்குப்பத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தார். அதே கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மிதுன் யூ.கே.ஜி. படித்து வந்தான்.
நேற்று சிலம்பரசன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஜெயசித்ராவும், மிதுனும் இருந்தனர். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் மிதுன் பிணமாக மிதந்தான். இதையடுத்து ஜெயசித்ரா தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து சிலம்பரசன் வளவனூர் போலீசில் புகார் செய்தார். அதில் எனது 2 குழந்தைகளின் சாவில் ஜெயசித்ரா மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி ஜெயசித்ரா கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.
இந்த 2 சம்பவங்களும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. எனவே 2 மாவட்ட போலீசாரும் தலைமறைவாக உள்ள ஜெயசித்ராவை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயசித்ராவின் செல்போன் நம்பரை ஆய்வு செய்து, அவர் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகம் படும்படியாக யாராவது இருந்தார்களா? என்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை சோதனை செய்து வருகின்றனர். ஜெயசித்ராவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினால் தான் 2 குழந்தைகள் எப்படி இறந்தது என்று தெரிய வரும்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X