search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MONEY LOOTED"

    • வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
    • இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவில் உள்ள 15 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் கீழ்கோடி தெருவை சேர்ந்தவர் விஜயா. இவரது மகன்கள் திருவேங்கடம் (வயது 46), வினோத். விவசாயியான இவர்கள் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    திருவேங்கடம் மற்றும் வினாத் இருவரும் நேற்று வயலில் வேலை பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கிவிட்டனர். விஜயா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவில் உள்ள 15 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபவர்களின் தடயங்கள் சேகரிக்கப்படுகின்றன.

    • திருச்சியில் நள்ளிரவில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்
    • இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்

    திருச்சி:

    திருச்சி சத்திரம் சஞ்சீவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கற்பகம் (வயது 40). இவர்களது மகன்கள் திருச்சியில் டிராவல்ஸ் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 6 பேர் இவர்கள் வீட்டிற்கு நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் வைத்திருந்த சுமார் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து கற்பகம் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×