என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டிராவல்ஸ் அதிபர் வீட்டில் நள்ளிரவில் நகை-பணம் கொள்ளை
- திருச்சியில் நள்ளிரவில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்
- இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்
திருச்சி:
திருச்சி சத்திரம் சஞ்சீவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கற்பகம் (வயது 40). இவர்களது மகன்கள் திருச்சியில் டிராவல்ஸ் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 6 பேர் இவர்கள் வீட்டிற்கு நுழைந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் வைத்திருந்த சுமார் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து கற்பகம் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்