search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money confiscate"

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டரை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் போலீசார் மீது புகார் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் 107 பட்டாசு பெட்டிகள், ஆண்களுக்கான பேண்ட், சர்ட் 38 ஜோடிகள், பெண்களுக்கான 6 சுடிதார்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

    விசாரணையில் இந்த பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையொட்டி இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோசை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோரையும், இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் பாலாஜி உள்பட 4 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், போலீஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது?, யாரிடமாவது வாங்கி வைத்தனரா? என்றும் பட்டாசு பெட்டிகள், புதிய துணி மணிகளை தீபாவளிக்காக முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாங்கி வைத்துள்ளனரா? என்று விசாரணை நடந்து வருகிறது. இது சம்பந்தமாக விரைவில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    பஸ் நிலையத்தில் ரூ.19 லட்சத்துடன் சுற்றித்திரிந்தவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இங்கு எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இன்று காலை பஸ் நிலையப்பகுதியில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    அப்போது ஒருவர் கையில் பேக்குடன் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தார். அவரது நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதனால் அவரை அழைத்து இன்ஸ்பெக்டர் மன்னவன் விசாரித்தார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் பேக்கை வாங்கி சோதனை நடத்தினர்.

    அதில், ரூ.19 லட்சம் இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பணம் யாருடையது? எங்கிருந்து கொண்டு வந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காததால் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் பிரபாகரன் (வயது 50) என்பதும், தேனி மாவட்டம், போடி தாலுகா, சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த ரூ.19 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×