search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arappalayam bus stand"

    பஸ் நிலையத்தில் ரூ.19 லட்சத்துடன் சுற்றித்திரிந்தவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இங்கு எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இன்று காலை பஸ் நிலையப்பகுதியில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    அப்போது ஒருவர் கையில் பேக்குடன் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தார். அவரது நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதனால் அவரை அழைத்து இன்ஸ்பெக்டர் மன்னவன் விசாரித்தார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் பேக்கை வாங்கி சோதனை நடத்தினர்.

    அதில், ரூ.19 லட்சம் இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பணம் யாருடையது? எங்கிருந்து கொண்டு வந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காததால் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் பிரபாகரன் (வயது 50) என்பதும், தேனி மாவட்டம், போடி தாலுகா, சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த ரூ.19 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×