என் மலர்
நீங்கள் தேடியது "mkalagiri"
மதுரை:
வாக்காளர் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல் சிறப்பு முகாம் மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தில் நடந்தது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரது தந்தை கருணாநிதி இறந்த 30-வது நாளில் அமைதி பேரணியை அவர் நடத்தினார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து இதில் பங்கேற்றனர். தி.மு.க.வின் பல்வேறு இடையூறுகளையும் தாண்டி பேரணியை சிறப்பாக நடத்தி காண்பித்தார். இதன் மூலம் மு.க. அழகிரியின் பணிபற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரது எதிர்காலம் பற்றி போக போகத்தான் தெரியவரும்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை, மாநகர் மாவட்டத்திலும், புறநகரிலும் நிறைய இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர். எனவே நிச்சயம் வெற்றி பெறுவோம்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே. போசை வெற்றி பெற வைத்தார். தி.மு.க. மெகா கூட்டணியில் இருந்த போதும் அந்த கட்சியால் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
தமிழகத்தில் 234 தொகுதி களிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #ministersellurraju #alagiri
மதுரை:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
பின்னர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் பூரண குணம் அடைவார் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி நேற்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து உறவினர்களிடம் விசாரித்தார்.
இன்று காலை 5 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் மு.க.அழகிரி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்ஷா, முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் மண்டலத்தலைவர் சின்னான் மற்றும் முபாரக் மந்திரி, கோபிநாதன், எம்.எல்.ராஜ், இசக்கிமுத்து உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
10-க்கும் மேற்பட்ட கார்களில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னை சென்றார். #Karunanidhi #DMK #MKAlagiri






