search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Vellamandi Natarajan"

    தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமா? வராதா? என்பது ரகசியம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். #ADMK #DMDK #MinisterVellamandiNatarajan
    திருச்சி:

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் தொலைநோக்கு பார்வையுடன் சீரிய முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதற்கு சான்றாக இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மகளிர்க்கு ஜெயலலிதா வழங்கியதுபோல, எடப்பாடி பழனிசாமி திட்டங்களை தொய்வின்றி வழங்கி வருகிறார். குறிப்பாக பொங்கல் பரிசு, 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் முதல் தவணையையும் வழங்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-

    கே: அ.தி.மு.க. கூட்டணி முழு வடிவம் பெறுவது எப்போது?

    ப: அதற்கான வடிவம் ஏற்கனவே அமைக்கப்பட்டு தலைவர்கள், மூத்த அமைச்சர்கள் அந்த அமைப்பில் உள்ளனர். அவர்கள் கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுப்பார்கள். அது ரசகியம் தான். கூட்டணி இறுதி வடிவம் பெற்றதும் அறிக்கை வெளியிடப்படும்.


    கே: அ.தி.மு.க.வில் தே.மு.தி.க. இடம்பெறுமா?

    ப: ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தை என்பதே ரகசியம்தான். எனவே தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமா? வராதா? என்பதும் ரகசியம்தான்.

    கே: அ.தி.மு.க. மீண்டும் திருச்சி தொகுதியை தக்க வைக்குமா?

    ப: அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற திறமைக்கு உரியது. தற்போது நாங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து செயல்பட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #DMDK #MinisterVellamandiNatarajan
    கொள்ளிடத்தில் தண்ணீர் முற்றிலுமாக வற்றிய பின்னர் தான் தொழில் நுட்ப குழு தயாரிக்கும் திட்டத்தின் அடிப்படையில் பாலத்தை இடிக்கும் பணி தொடங்கும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார். #VellamandiNatarajan
    திருச்சி:

    முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்தால் பாதுகாப்பு கருதி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. தற்போது 1 லட்சத்து 67 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது.

    இதனால் அந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1928-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இரும்பு பாலம் சேதம் அடைந்தது. அந்த பாலத்தை தாங்கி நிற்கும் ஆறாவது தூணில் கடந்த புதன்கிழமை இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது.

    இந்த விரிசல் நேற்று முன்தினம் காலை மேலும் அதிகமானது. இதனால் அந்த தூண் அப்படியே தண்ணீருக்குள் இறங்கியபடியே சென்றது. நேற்று காலை சுமார் 10 அடி ஆழத்திற்கு தண்ணீருக்குள் இறங்கியது. எனவே இந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இந்த பாலத்தை நேற்று இரண்டாவது நாளாக ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கலெக்டர் ராசாமணி ஆகியோர் கூறியதாவது:-

    கொள்ளிடத்தில் மேலும் நீர் திறப்பு அதிகரிக்கும் பட்சத்தில் ஆறாவது தூண் முற்றிலுமாக தண்ணீருக்குள் இறங்கி பாலத்தின் அந்த பகுதி அப்படியே இடிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பாலத்தில் யாரும் செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பாலத்தை இப்போது உடனடியாக இடிக்க முடியாது.

    கொள்ளிடத்தில் தண்ணீர் முற்றிலுமாக வற்றிய பின்னர் தான் தொழில் நுட்ப குழு தயாரிக்கும் திட்டத்தின் அடிப்படையில் அரசுக்கு கருத்துரு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் பின்னர் தான் பாலத்தை இடிக்கும் பணி தொடங்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார். #TNMinister #VellamandiNatarajan
    ×