search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister kandasamy"

    புதுவை துறைமுகத்தில் இருந்து 3 மாதத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை துறைமுகத்தில் மீண்டும் சரக்கு போக்கு வரத்து தொடங்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்காக துறைமுக வளாகத்தில் குடோவுன்கள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    சென்னைக்கு வரும் கப்பல்களில் உள்ள கண்டெய்னர்களை புதுவைக்கு எடுத்து வந்து இங்கிருந்து கனரக வாகனங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவது தொடர்பாக துறைமுக கழகத்தோடு புதுவை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    சரக்கு போக்குவரத்து தொடங்கும் என பல மாதமாக அரசு கூறி வந்தாலும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே துறைமுகத்திற்குள் பார்ஜர், கப்பல்கள் வர வேண்டும் என்றால் வம்பாகீரப்பாளையம் முகத்துவாரத்தின் வழியாகவே வர முடியும். இதன் வழியாகவே மீன்பிடி கப்பல்கள் கடலுக்கு செல்கிறது. இந்த முகத்துவாரம் அடிக்கடி மணலால் மூடி விடுகிறது.

    கடந்த மாதம் 10-ந்தேதி முதல் மீன்பிடி படகுகள்கூட செல்ல முடியாத அளவு முகத்துவாரம் மணலால் மூடியது. இந்த முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முகத்துவாரத்தை தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது.

    இந்த பணியை அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தார். முகத்துவார பகுதிக்கு வந்த அமைச்சர் கந்தசாமி துறைமுக அதிகாரிகளிடமும், தூர்வாரும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடமும் நடைபெறும் பணிகள் குறித்து பேசினார். அவருடன் அன்பழகன் எம்.எல்.ஏ., துறைமுக செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    இதன்பின் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரூ.1.78 கோடி செலவில் துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்படுகிறது. 60 ஆயிரம் கியூபிக் மீட்டர் மணலை அகற்ற திட்டமிட்டுள்ளோம். இந்த பணி 3 மாதத்தில் நிறைவடையும். மேலும் நிரந்தரமாக மணலை அகற்ற ரூ.4 கோடியில் திட்டமிட்டுள்ளோம். முகத்துவாரம் தூர்வாரும் பணி முடிவடைந்தவுடன் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்தும் செயல்பட தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரசு உத்தரவை மீறி உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து வந்த 2 ஆலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 50 மைக்ரானுக்கு கீழ் தயாரிக்கப்படும் பாலித்தீன் பைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏரி, குளம், வாய்க்காலில் பாலித்தீன் பைகள் அடைத்துக்கொள்வதால் தண்ணீர் வெளியேற முடியவில்லை. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதை கருத்தில்கொண்டு 50 மைக்ரானுக்கு கீழ் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு அக்டோபர் 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்படும் என சட்ட சபையில் அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர பகுதியில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அமைச்சர் கந்தசாமி சென்று ஆய்வு செய்தார். அந்த கடைகளில் 50 மைக்ரானுக்கு கீழ் இருந்த பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் இன்று அமைச்சர் கந்தசாமி மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கந்தசாமி திடீர் ஆய்வு நடத்தினார்.

    அப்போது 2 தொழிற்சாலைகளில் 50 மைக்ரானுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் உடனடியாக அந்த தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் 3 தொழிற்சாலைகளில் அமைச்சர் ஆய்வு நடத்தினார். அந்த தொழிற்சாலை உரிமையாளர்களிடம் 50 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பைகளை தயாரித்தால் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

    ஆய்வின்போது அரசு செயலர்கள் பார்த்திபன், ஜவகர், சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையாளர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    பின்னர் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைகிறது. இதனால் இதை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என உத்தரவிட்டிருந்தோம். இதை மீறி மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தேன். இந்த தொழிற்சாலைகள் உரிமம் பெறாமல் பிளாஸ்டிக் பைகளை தயாரித்து வருகின்றனர். 2 ஆலைகளை சீல் வைத்துள்ளோம். அரசு உத்தரவை மீறி பாலித்தீன் பை தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளேன்.

    மேலும் பல தொழிற்சாலைகள் உரிமம் பெறாமல் இயங்குவதாக தெரியவந்துள்ளது. இந்த தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் கொண்ட குழு அமைத்துள்ளோம். இந்த குழுவினர் முழுமையாக ஆய்வு செய்யவுள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews
    இந்த மாதம் முதல் மாதந்தோறும் இலவச அரிசி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி சட்டசபையில் அமைச்சர் கந்தசாமி உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    அன்பழகன்:- புதுவை மாநிலத்தில் ஆட்சி அமைந்தது முதல் எத்தனை மாதம் இலவச அரிசி வழங்கப்பட்டது? எத்தனை மாதம் வழங்கப்படவில்லை? அரிசி வழங்காத மாதத்தில் வங்கி மூலம் மக்களுக்கு அரிசிக்கான தொகை வழங்கும் திட்டம் உள்ளதா?

    அமைச்சர் கந்தசாமி:- எங்கள் ஆட்சி அமைந்தது முதல் கடந்த ஏப்ரல் வரை 12 மாதத்திற்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது. 12 மாதத்திற்கு வழங்கவில்லை. இலவச அரிசிக்காக மாதத்திற்கு சுமார் ரூ.15 கோடியே 88 லட்சம் செலவாகிறது.

    அன்பழகன்:- பட்ஜெட்டில் இலவச அரிசிக்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்குகிறீர்கள். அதற்கு பிறகு ஏன் இலவச அரிசி வழங்க முடியாமல் போகிறது?

    கந்தசாமி:- ஏழைகளுக்கு மட்டும்தான் இலவச அரிசி வழங்க வேண்டும் என கவர்னர் கூறுகிறார். இதனால் அனுப்பும் கோப்பு சென்று திரும்புகிறது. இதனால்தான் அரிசி வழங்க முடியாமல் போகிறது. இந்த மாதம் முதல் அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அன்பழகன்:- இலவச அரிசிக்காக ரூ.216 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளீர்கள். அரிசி போட முடியாவிட்டால் வங்கியில் பணமாக போடலாமே?

    கந்தசாமி:- பணமாக கொடுத்துவிட்டால் சாராயகடை, மது கடைகளுக்குத்தான் போகும். அதனால்தான் பணமாக கொடுப்பதை தவிர்க்கிறோம்.

    பாலன்:- கோப்புகளை ஏன் கவர்னருக்கு அனுப்புகிறீர்கள்? உச்சநீதிமன்றமே கோப்புகளை அனுப்ப வேண்டாம் என சொல்லி விட்டதே?

    அனந்தராமன்:- கோப்புகளை கவர்னருக்கு அனுப்ப தேவை கிடையாது. நீங்களே முடிவெடுங்கள்.

    பாலன்:- கவர்னருக்கு கோப்புகளை திருப்பி அனுப்பும் அதிகாரம் கிடையாது. நிலை உத்தரவு மட்டும்தான் பிறப்பிக்க முடியும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மத்திய உள்துறைக்கு அனுப்புங்கள்.

    கந்தசாமி:- நடைமுறையில் உள்ள சிக்கலைத் தான் தெரிவிக்கிறோம். இந்த மாதம் முதல் மாதந்தோறும் இலவச அரிசி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் பாலன், சிகப்பு ரே‌ஷன் கார்டுகளை மஞ்சள் கார்டாக மாற்றியுள்ளனர். அவர்களுக்கு இலவச அரிசி வழங்குவதில்லை. கார்டுகளை மாற்ற எந்த அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் கந்தசாமி, ரே‌ஷன்கடை ஊழியர்கள் மூலமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருந்தோம். அந்த ஆய்வின் அடிப்படையில் சிகப்பு ரே‌ஷன் கார்டை மஞ்சள் கார்டாக மாற்றியுள்ளனர். புகார்கள் வந்ததால் கார்டுகளை மாற்றும் பணியை நிறுத்திவிட்டோம். மாற்றப்பட்ட மஞ்சள் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.
    புதுவையில் பிளாஸ்டிக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். #MinisterKandasamy

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் பேசியாதவது:-

    உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

    உலகில் பல நாடுகள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றான பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். நம் நாட்டிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக்கிற்கு தடை கொண்டுவந்துள்ளதோடு, அந்த தடையை முழுமையாக அமல்படுத்தி வருகின்றனர். தமிழக அரசும் வரும் ஜனவரி வரை காலக்கெடு அளித்து பிளாஸ்டிக் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் புதுவையில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக எந்தவித முன்னேற்பாடோ, நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை.

    மழை காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் கால்வாய்களை அடைத்துக்கொள்வதால் பலவித இன்னல்கள் ஏற்படுகிறது. கழிவுநீர் ரோட்டில் கலந்துவிடுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் கடலும் மாசுபடுகிறது.

    சிறிய மாநிலமான புதுவையில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது மிகவும் எளிதான காரியம். எனவே புதுவை மாநிலத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் கந்தசாமி பேசும் போது, கடந்த 5 மாதத்திற்கு முன்பே முதல்-அமைச்சருடன் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது மாற்று ஏற்பாடுகளை செய்து கொண்டு பிளாஸ்டிக்கை தடை செய்வது என முடிவெடுத்தோம்.

    பிளாஸ்டிக் பொருட்களால் ஏரி, குளம், கடல் போன்ற நீர்நிலைகள் மாசுபடுகிறது. எனவே புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்வோம். விரைவில் பிளாஸ்டிக் தடைக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

    வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், புதுவையில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களையும் தடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×