search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pondicherry harbour"

    • கடல் வழியிலும் கடலோர காவல்படை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.
    • மோதலை தவிர்க்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் 3 சூப்பிரண்டுகள் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    சுருக்கு மடிவலை பயன்படுத்த தமிழகம் மற்றும் புதுவையில் தடை விதிக்கபட்டுள்ளது.

    இருப்பினும் புதுவையில் சுருக்குவலையை சிலர் இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராமங்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி வீராம்பட்டினம்- நல்லவாடு மீனவ கிராமங்களுக்கு இடையே கடல் மார்க்கமாகவும் கடற்கரையிலும் மோதல் ஏற்பட்டது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை அடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் கூடி இன்று (திங்கட்கிழமை) முதல் புதுவை துறைமுகத்துக்குள் சுருக்குவலையுடன் வரும் படகுகள் தடை செய்யப்படும். மீறி வரும் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர்.

    இதனால் இன்று மீனவர்களுக்குள் மோதல் வரக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பா கீரப்பாளையம் மற்றும் தேங்காய்த்திட்டு துறைமுகம் பகுதியில் போலீசார் காலை 7 மணி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடல் வழியிலும் கடலோர காவல்படை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. மோதலை தவிர்க்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் 3 சூப்பிரண்டுகள் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    புதுவை துறைமுகத்தில் இருந்து 3 மாதத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை துறைமுகத்தில் மீண்டும் சரக்கு போக்கு வரத்து தொடங்க அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. இதற்காக துறைமுக வளாகத்தில் குடோவுன்கள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    சென்னைக்கு வரும் கப்பல்களில் உள்ள கண்டெய்னர்களை புதுவைக்கு எடுத்து வந்து இங்கிருந்து கனரக வாகனங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவது தொடர்பாக துறைமுக கழகத்தோடு புதுவை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    சரக்கு போக்குவரத்து தொடங்கும் என பல மாதமாக அரசு கூறி வந்தாலும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே துறைமுகத்திற்குள் பார்ஜர், கப்பல்கள் வர வேண்டும் என்றால் வம்பாகீரப்பாளையம் முகத்துவாரத்தின் வழியாகவே வர முடியும். இதன் வழியாகவே மீன்பிடி கப்பல்கள் கடலுக்கு செல்கிறது. இந்த முகத்துவாரம் அடிக்கடி மணலால் மூடி விடுகிறது.

    கடந்த மாதம் 10-ந்தேதி முதல் மீன்பிடி படகுகள்கூட செல்ல முடியாத அளவு முகத்துவாரம் மணலால் மூடியது. இந்த முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முகத்துவாரத்தை தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது.

    இந்த பணியை அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தார். முகத்துவார பகுதிக்கு வந்த அமைச்சர் கந்தசாமி துறைமுக அதிகாரிகளிடமும், தூர்வாரும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடமும் நடைபெறும் பணிகள் குறித்து பேசினார். அவருடன் அன்பழகன் எம்.எல்.ஏ., துறைமுக செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    இதன்பின் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரூ.1.78 கோடி செலவில் துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்படுகிறது. 60 ஆயிரம் கியூபிக் மீட்டர் மணலை அகற்ற திட்டமிட்டுள்ளோம். இந்த பணி 3 மாதத்தில் நிறைவடையும். மேலும் நிரந்தரமாக மணலை அகற்ற ரூ.4 கோடியில் திட்டமிட்டுள்ளோம். முகத்துவாரம் தூர்வாரும் பணி முடிவடைந்தவுடன் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்தும் செயல்பட தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×