search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Jeyakumar"

    20-வது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜப்பான் செல்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. #MinisterJayakumar
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஜப்பானில் 22-ந் தேதி முதல் 24-ந் தேதிவரை, 20-வது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) நடத்துகிறது.

    இந்த கண்காட்சியில், மீன்வளத்துறை இயக்குனர் ஜி.எஸ்.சமீரான், ராமநாதபுரம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோருடன் சென்று கலந்து கொள்வதற்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு அரசு அனுமதி அளிக்கிறது.

    இந்த பயணத்துக்கு ஆகும் செலவு அனைத்தையும் அரசே ஏற்கும். அவர் சுற்றுலா செல்லும் இந்தக் காலகட்டம். அவரது பணிகாலமாக கருதப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #RajivMurderCase #Jayakumar
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வேதனையை தமிழக அரசு உணர்ந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து வெற்றி காண்போம்

    தமிழகத்தில் வருங்காலத்தில் நிலத்தடி நீர் குறையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

    அப்போது  தகுதி நீக்க வழக்கு விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலைச் சந்திப்போம் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியது குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போன்றது என கூறினார். #RajivMurderCase #Jayakumar
    “தனது கணக்கு வேலையை மட்டும் பார்த்தால் நல்லது” என்றும், “சும்மா இருக்கும் ரஜினிகாந்தை ஊதி கெடுத்துவிட வேண்டாம்”, என்றும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.#Rajinikanth #RajinikanthPolitical #jayakumar
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- ‘தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது. அதை பா.ஜ.க.வுடன் சேர்ந்து ரஜினிகாந்த் நிரப்ப முடியும்’ என ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருக்கிறாரே?

    பதில்:- ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய கணக்கு வேலையை மட்டும் பார்த்தால் நல்லது. ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆகிவிடக்கூடாது. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது பழமொழி. பாவம், ரஜினிகாந்த் சும்மா இருக்கிறார். அவரை ஆடிட்டர் குருமூர்த்தி ஊதி கெடுத்துவிட வேண்டாம்.

    தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அப்படி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும்போது, வெற்றிடம் எனும் நிலை எப்படி இருக்க முடியும்?

    ஆடிட்டர் குருமூர்த்தி நேரடியாக சொன்னாலும் சரி, சூசகமாக சொன்னாலும் சரி தமிழகத்தை பொறுத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. தான் ஆட்சி கட்டிலில் அமரும், கோலோச்சும். கருத்துகளை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். ஆனால் மக்கள் தான் தீர்ப்பு வழங்குபவர்கள். கனவிலும், கற்பனை உலகத்திலும் இருப்பவர்களின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது.

    கேள்வி:- காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் 600 பக்க தீர்ப்பை யாரும் படிக்காமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்று குருமூர்த்தி கூறியிருக்கிறாரே?



    பதில்:- ஆளும் அரசே போராடுகிறது என்ற உண்மையை ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு என் நன்றி. மாநில உரிமைக்காக அ.தி.மு.க. அரசு என்றைக்குமே போராடும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என உள்ளங்கை நெல்லிக்கனி போல தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. அந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. எனவே தான் மத்திய அரசுக்கு எல்லா விதத்திலும் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறோம்.

    கேள்வி:- குழந்தை திருட்டு என கருதி கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் சென்னை பெண்மணி இறந்திருக்கிறாரே?

    பதில்:- ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பது தான் சட்டத்தின் மாண்பு. பாலியல் தொல்லைகள் உள்பட குழந்தைகள் மீதான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்படிப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவதே மக்கள் மற்றும் அரசின் கடமையாகும். எனவே பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்து இதுபோல செயல்களில் ஈடுபடக்கூடாது. யார் மீதாவது சந்தேகம் இருந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்கலாம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார். #Rajinikanth #RajinikanthPolitical #jayakumar
    ×