search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு - ஜெயக்குமார்
    X

    பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு - ஜெயக்குமார்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #RajivMurderCase #Jayakumar
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வேதனையை தமிழக அரசு உணர்ந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து வெற்றி காண்போம்

    தமிழகத்தில் வருங்காலத்தில் நிலத்தடி நீர் குறையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

    அப்போது  தகுதி நீக்க வழக்கு விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலைச் சந்திப்போம் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியது குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போன்றது என கூறினார். #RajivMurderCase #Jayakumar
    Next Story
    ×