search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milk Producers Association"

    • கறவை மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

    பவானி:

    பவானியில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் சித்தோடு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் பால் நிறுவன அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் சார்பில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 விதம் உயர்த்தி அறிவித்திட கோரி கறவை மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பெருமாள், மாநில பொருளாளர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதனைத் தொடர்ந்து இதில் கலந்து கொண்ட வர்கள் தீவனங்கள், கால்நடைகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையிலும் தனியார் நிறுவனங்கள் ஆவினை விட கூடுதல் விலை கொடுப்பதால் ஆரம்ப சங்கங்கள் மூடுவதை தடுத்து நிறுத்தும் முறையில் பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி ஒரு லிட்டருக்கு பசும்பாலு க்கு ரூ. 45-ம், எருமை பாலுக்கு ரூ.54 என அறிவிக்க வேண்டும்.

    கொழுப்பு சத்து 5.9க்கு மேல் வராத நிலையில் அமைச்சர் கூடுதல் கொள்முதல் விலையை அறிவித்திருப்பது பால் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

    தமிழ்நாடு அரசு 1 லிட்டருக்கு ரூ.1 வீதம் ஊக்க தொகை அறிவித்தது வெறும் கண்துடைப்பு என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் கறவை மாடுகளுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தாட்கோ மூலம் மானிய விலையில் வங்கி கடன் 14 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் கனரா வங்கி சார்பில் வழங்கப்பட்டது.
    • புதிதாக வாங்கப்படும் கறவை மாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவினுக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை பால்வளத்துறை மற்றும் ஆவின் இணைந்து நடத்திய கடன் வழங்கும் நிகழ்ச்சி 0.1884 சங்கரன்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் (பால்வளம்) நெல்லை மற்றும் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் தாட்கோ மூலம் மானிய விலையில் வங்கி கடன் 14 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் கனரா வங்கி சார்பில் வழங்கப்பட்டது.

    மேலும் 80 பயனாளி களுக்கு தாட்கோ மூலம் வங்கி கடன் விரைவில் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. விழாவில் அரசின் சார்பில் பால்வளத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மேலும் மாட்டுக்கடன்கள் குறித்து உறுப்பினர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதிதாக வாங்கப்படும் கறவை மாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பால் முழுவதையும் ஆவினுக்கு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. இதில் 0.1884 சங்கரநயினார்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செய லாட்சியர், தாட்கோ மேலாளர், தென்காசி, நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர், சங்கரன்கோவில் கனரா வங்கி முதன்மை மேலாளர், சங்கரன்கோவில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தென்காசி முதுநிலை ஆய்வாளர் (பால்) தென்காசி நன்றி கூறினார்.

    ×