search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Men-Women"

    • நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.
    • போட்டிகளில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.

    முதல் நாளில் ஆண்களு க்கான போட்டியும், 2-வது நாளில் பெண்களுக்கான போட்டியும் நடைபெறுகிறது.

    அதேப்போல் ஆண்களுக்கான கால்பந்து போட்டி 20-ந் தேதியும், பெண்களுக்கான கால்பந்து போட்டி 26-ந் தேதியும் நடக்கிறது. ஆண்களுக்கான கபடி போட்டி 26-ந்தேதியும், பெண்களுக்கான கபாடி போட்டி 27-ந் தேதியும் நடக்கிறது.

    போட்டிகள் காலை 8 மணி முதல் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

    ஆண்கள், பெண்க ளுக்கான கபடி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். கால்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    கைப்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல் அவசியம் கொண்டு வர வேண்டும். இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனபெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிக்கு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு நடக்கிறது.
    • மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கு சதுரங்க போட்டி தேர்வு கடலூரில் ஆயிரவைசிய திருமண மண்டபத்தில் நாளை (18-ந் தேதி) 19-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

    கடலூர்:

    தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெற உள்ள பிரம்மாண்டமான 44-வது பைடு செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கு சதுரங்க போட்டி தேர்வு கடலூரில் ஆயிரவைசிய திருமண மண்டபத்தில் நாளை (18-ந் தேதி) 19-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில் 15 வயதிற்குட்பட்ட மாணவமாணவிகள் பங்கு பெறலாம். இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் எனமொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். போட்டியில் பங்கு பெறமுன்பதிவு அவசியம். ஆண்களுக்கு 25 பரிசுகளும், பெண்களுக்கு 25 பரிசுகளும்வழங்கப்பட உள்ளது.பதிவு செய்வதற்கான நடைமுறைhttps://prs.aicf.in/new-register https://forms.gle/vSoQM34D6TMtokUi9தங்கள் பதிவை உறுதி செய்ய 8012568392 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    ×