search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 selected"

    • கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிக்கு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு நடக்கிறது.
    • மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கு சதுரங்க போட்டி தேர்வு கடலூரில் ஆயிரவைசிய திருமண மண்டபத்தில் நாளை (18-ந் தேதி) 19-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

    கடலூர்:

    தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெற உள்ள பிரம்மாண்டமான 44-வது பைடு செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கு சதுரங்க போட்டி தேர்வு கடலூரில் ஆயிரவைசிய திருமண மண்டபத்தில் நாளை (18-ந் தேதி) 19-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில் 15 வயதிற்குட்பட்ட மாணவமாணவிகள் பங்கு பெறலாம். இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் எனமொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். போட்டியில் பங்கு பெறமுன்பதிவு அவசியம். ஆண்களுக்கு 25 பரிசுகளும், பெண்களுக்கு 25 பரிசுகளும்வழங்கப்பட உள்ளது.பதிவு செய்வதற்கான நடைமுறைhttps://prs.aicf.in/new-register https://forms.gle/vSoQM34D6TMtokUi9தங்கள் பதிவை உறுதி செய்ய 8012568392 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    ×