என் மலர்
நீங்கள் தேடியது "Medicine in search of people"
- சுகாதார துணை இயக்குனர் ஆய்வு
- மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகள் டாக்டர். த.ரா.செந்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் 102 ரெட்டியூர் ஊராட்சி, முல்லை கிராமத்தில் துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். முல்லை கிராமத்தில் நடைபெற்று வந்த மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு நேரடியாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டு அறிந்தார்.
ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.பசுபதி, நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.செ.மதன்ராஜ், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.
- ஊட்டச்சத்து பொருட்களை தாய்மார்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி.
- மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் 'ஊட்டச்சத்தை உறுதிசெய்' திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருட்களை தாய்மார்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் இன்று நடந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த திட்டத்தில் 65 ஆயிரத்து 503 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தில் உருவான மக்களை தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாக நிறைவேறி வருகிறது. 2 கோடி பயனாளிகளை நெருங்கி கொண்டிருக்கிறது.
வருகிற 29-ந் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க செல்கிறார். அப்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளியை திருப்பசாவடி மேடு, கோவிந்தபுரம், ஏணதி மங்கலம் ஆகிய 3 கிராமங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார்.
அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச மருந்து பெட்டகத்தை வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.






