search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medai"

    • 6 மாதங்களாக எரிவாயு தகன மேடை செயல்படாமல் உள்ளது
    • சாலையோரம் பிணங்களை எரிப்பதால் அச்சம்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் பொதுவான வகையில் எரிவாயு மின் தகன மேடை சென்ற ஆண்டு தமிழக அரசால் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இங்கு இறந்த நபரை தகனம் செய்ய ரூ.3000 என நகராட்சி மூலம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த 6 மாதங்களாக இந்த எரிவாயு தகன மேடை செயல்படாமல் உள்ளது.

    இதனால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல் முக்கிய சாலையின் ஓரத்தில் உள்ள சுடுகாட்டில் பிணங்களை எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் அந்த வழியாக சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள் புகை மூட்டமாக இருப்பதால் சிரமம் அடைகிறார்கள். மேலும் பலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.

    இந்த சுடுகாட்டின் அருகிலேயே அரசு கலைக்கல்லூரியும் அமைந்துள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் வகுப்பறையில் பெரும் சிரமத்தை சந்திப்பதாக புகார் தெரிவித்துள்ளதோடு இந்த சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஆங்கிலேயர் காலத்தில் கோட்டையாக செயல்பட்ட மேடை போலீஸ் நிலையத்தையும் பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கைகள் எழுந்து வந்தது.
    • ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் நிலையங்களாக செயல்பட்டு வந்த அதிலிருந்த 2 அறைகள் புதுப்பிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பழங்கால கட்டிடங்கள், பொருள்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கோட்டையாக செயல்பட்ட மேடை போலீஸ் நிலையத்தையும் பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கைகள் எழுந்து வந்தது. அதனை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி வந்தார்.

    அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மரங்கள் முளைத்து கிடந்த அந்த மேடை போலீஸ் நிலையத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.

    ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் நிலையங்களாக செயல்பட்டு வந்த அதிலிருந்த 2 அறைகள் புதுப்பிக்கப்பட்டது. மேலும் புல் வெளிகள் அமைக்கப்பட்டு பார்ப்பவர்களை கண் கவரும் வகையில் பல்வேறு சீரமைப்பு பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து வரவேற்பு அதிகரித்துள்ளது.

    அங்குள்ள அறையில் வரலாற்றை எடுத்துக் கூறும் வகையிலான புகைப்பட கண்காட்சிகள் அமைக்கப்பட உள்ளது. கோட்டைக்கு மேலே ஏறி செல்லும் படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் அதில் அமர்ந்து பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

    மேலும் பார்வையாளர்கள் அமரும் வகையில் மினி காங்கிரீட் கேலரி உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் பொழுதுபோக்கும் விதமாக இங்கு வருவார்கள் என்பதால் கார் பார்க்கிங், டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ×