search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mark Miller"

    • 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்படும் என கனடா அரசு அறிவிப்பு.
    • கனடா அரசின் இந்த முடிவினால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா காலம் இரண்டு ஆண்டுகள் என கனடா அரசு நிர்ணயித்துள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், "கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி விசாக்கள் வழங்கப்பட்டன. 2023-ம் ஆண்டு 5.60 லட்சம் மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35 சதவீதம் அளவுக்கு மாணவர் விசாக்களை குறைக்க முடிவெடுத்துள்ளோம். இதனால் இந்த ஆண்டு 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் வரை மட்டும் அந்த விசா செல்லுபடியாகும்" என தெரிவித்தார்.

    மேலும், கனடாவில் தங்குவதற்கு வீடுகள் கிடைப்பதில் மாணவர்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். கனடா வரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதே இந்த பிரச்சினைக்குக் காரணம். இதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கனடா அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது என தெரிவித்த மார்க் மில்லர், சில கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும், நிரந்தர கனடா வாசியாக மாற முடியும் என்றெல்லாம் போலியான விளம்பரங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    கனடா அரசின் இந்த முடிவினால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

    • இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, கனடா வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைவு.
    • 16.4 பில்லியன் அமெரிக்க டாலர் கனடா-விற்கு வருவாய் ஈட்டிய நிலையில் தற்போது குறையத் தொடங்கியது.

    இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியா - கனடா இடையேயான உறவில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு எவ்வாறு மேம்படும் என்பது குறித்து என்னால் சொல்ல முடியாது" என தெரிவித்தார். கடந்த 2022-ன் கடைசி 3 மாதங்களில் கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக இருந்த நிலையில், 2023-ன் கடைசி 3 மாதங்களில் இந்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 910 ஆக சரிந்ததாக கனடா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கனடா செல்லும் இந்திய மாணவர்கள் 86 சதவீதம் குறைந்துள்ளனர் என தெரிவித்தார்.

    இந்திய மாணவர்களின் வருகை காரணமாக கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் பொருளீட்டியதாக தெரிவித்த அமைச்சர், 16.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருவாய் வந்த நிலையில், அது தற்போது குறையத் தொடங்கியது எனக் கூறினார். இந்தியா - கனடா இடையேயான உறவில், ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக இந்திய மாணவர்கள் கனடா செல்வது குறைந்துள்ள அதேநேரத்தில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க கனடா அரசு சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

    ×