search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manikkavasaka"

    • திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக போற்றப்படுகிறது.
    • 'ஓம்' எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே.

    மனதை உருகச்செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படு கிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்தவாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

    பாடல்:-

    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

    ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே.

    விளக்கம்:-

    உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடுபேறு அடைந்தேன். நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் 'ஓம்' எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே. காளையை வாகனமாக வைத்திருப்பவனே. வேதங்கள், 'ஐயா' எனப் பெரிதும் வியந்து கூறி, ஆழமாகவும், பலப்பல தன்மைகளைக் கொண்டு ஆராய்ந்தும். காண முயற்சி செய்கின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே. என் இனிய சிவபெருமானே.

    ×