search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maldives President"

    • மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முதல் கட்டமாக வெளியேறும் நடவடிக்கை தொடங்கியது.
    • மே 10-ம் தேதிக்குள் ராணுவ வீரர்கள் முழுமையாக வெளியேறி விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

    மாலே:

    மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையில் மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

    இவர் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னரே மாலத்தீவில் நம் நாட்டு ராணுவ வீரர்கள் முகாம் அமைத்துள்ளனர். அதிபராக பதவியேற்றவுடன் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்.

    கடந்த மாதம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய முகமது முய்சு, மாலத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் இனி அனுமதிக்க முடியாது. 3 விமான தளங்களில் ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10-ம் தேதிக்குள் வெளியேற்றப்படுவர். மற்ற 2 விமான தளங்களில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறிவிடுவார்கள். இதற்கான ஒப்பந்தம் இந்தியா-மாலத்தீவு இடையே மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

    இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர் அந்நாட்டை விட்டு படிப்படியாக வெளியேறத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. மே 10-ம் தேதிக்குள் இந்திய ராணுவம் முழுமையாக வெளியேற உள்ளது.

    • மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
    • கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து டிரோன்களை மாலத்தீவு அரசு வாங்கியது.

    மாலி:

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டிய அவர் அந்நாட்டுடன் ராணுவம் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

    இந்நிலையில், கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து டிரோன்களை மாலத்தீவு அரசு வாங்கியுள்ளது. துருக்கி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அடுத்து முதல் முறையாக ராணுவ டிரோன்கள் மாலத்தீவுக்கு கொண்டு வரப்பட்டன.


    அந்த டிரோன்கள் தற்போது நூனு மாபாரு சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விரைவில் டிரோன்கள் செயல்பாடு தொடங்கும் என்று கூறப்படுகிறது. எத்தனை டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

    • பிரதமரின் முயற்சியை மாலத்தீவை சேர்ந்த 3 மந்திரிகள் விமர்சித்திருந்தனர்
    • நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்றார் முய்சு

    சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில், சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்சு (Mohamed Muizzu) வெற்றி பெற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றதுமே மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன், இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்று அங்கு இந்தியர்களை சுற்றுலாவிற்கு ஈர்க்கும் முயற்சியாக பல இயற்கை எழில் மிகுந்த பல காட்சிகளை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அத்தீவின் சிறப்புகளை வர்ணித்து இருந்தார்.


    ஆனால், பிரதமரின் முயற்சியை மாலத்தீவை சேர்ந்த 3 மந்திரிகள், சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு விமர்சித்திருந்தனர்.

    இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியர்கள் பலர் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதை ரத்து செய்தனர்.

    இதற்கிடையே, 5 நாள் பயணமாக சீனா சென்றிருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கூறியதாவது:

    இந்திய பெருங்கடல் (Indian Ocean), அதில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. இந்தியப் பெருங்கடலில் 9 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்யேக பொருளாதார மண்டலமாக மாலத்தீவு உள்ளது. இப்பெருங்கடலில் மாலத்தீவிற்கும் பங்கு உண்டு.

    நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம். அதற்காக எந்த ஒரு நாட்டிற்கும் எங்களை கொடுமைப்படுத்தும் உரிமை கிடையாது.

    நாங்கள் எந்த நாட்டின் கொல்லைப்புறத்திலும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு.

    சீனா மாலத்தீவின் உள்நாட்டு விவகாரங்கள் எதிலும் தனது செல்வாக்கை செலுத்தாது.

    இவ்வாறு முய்சு தெரிவித்தார்.

    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். #MaldivesPresident #IbrahimMohamedsolih #Modi
    புதுடெல்லி:

    மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக கடந்த மாதம் 17-ம் தேதி இப்ராஹிம் முகமது சோலிஹ் பதவியேற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு  இப்ராஹிம் முகமது சோலிஹ்-க்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

    அந்த அழைப்பை ஏற்று மூன்றுநாள் அரசுமுறை பயணமாக  இப்ராஹிம் முகமது சோலிஹ் டெல்லி வந்துள்ளார். ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு முப்படைகளின் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை இங்குள்ள ஐதராபாத் இல்லத்தில்  இப்ராஹிம் முகமது சோலிஹ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடந்த இந்த ஆலோசனைகளின்போது இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும் உடனிருந்தனர்.

    மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவுடன் நட்பு வைத்துகொண்டே சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தார்.

    இந்நிலையில், அதிபராக பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள  இப்ராஹிம் முகமது சோலிஹ் ஆட்சிக் காலத்தில் இந்தியா-மாலத்தீவு இடையிலான நட்பு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#MaldivesPresident #IbrahimMohamedsolih #Modi


    முதல் வெளிநாட்டு பயணமாக இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது சோலி நேற்று இந்தியா வந்தார். #MaldivesPresident #MohamedSolih #IndiaVisit #Modi
    புதுடெல்லி:

    மாலத்தீவு அதிபராக இப்ராகீம் முகமது சோலி கடந்த மாதம் 17-ந்தேதி பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அப்போது இந்தியா வருமாறு நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் பயணமாக முகமது சோலி நேற்று இந்தியா வந்தார். அதிபராக பதவி ஏற்றபின் அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.



    டெல்லி விமான நிலையம் வந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர். மாலத்தீவு அதிபர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்படுகிறது.

    டெல்லியில் மகாத்மா காந்தி சமாதியில் இப்ராகீம் முகமது சோலி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.  #MaldivesPresident #MohamedSolih #Modi
    மாலத்தீவு நாட்டின் புதிய அதிபர் இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். #MaldivesPresident #MohamedSolih #Modi
    புதுடெல்லி:

    மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக கடந்த மாதம் 17-ம் தேதி இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு  முஹம்மது சோலிஹ்-க்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

    அந்த அழைப்பை ஏற்று மூன்றுநாள் அரசுமுறை பயணமாக முஹம்மது சோலிஹ் நாளை டெல்லி வருகிறார்.

    வரும் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவுடன் நட்பு வைத்துகொண்டே சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தார்.

    இந்நிலையில், அதிபராக பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வரும் முஹம்மது சோலிஹ் ஆட்சிக் காலத்தில் இந்தியா-மாலத்தீவு இடையிலான நட்பு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MaldivesPresident #MohamedSolih #Modi
    ×