search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "makesh babu"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகேஷ் பாபு நடித்துள்ள திரைப்படம் 'குண்டுர் காரம்'.
    • இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குண்டுர் காரம்'. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'குண்டுர் காரம்' திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். ஆனால் ரசிகர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு நாற்காலிகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    இதை பார்த்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடியடி நடத்தினர். கூட்ட நெரிசலில் பழைய குண்டுர் காவல் நிலையத்தின் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கட ராவின் கால் முறிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


    • நடிகை அனுஷ்கா தற்போது 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.


    தற்போது இவர் இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 4-ஆம் தேதி 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி மீண்டும் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.





    • நடிகர் மகேஷ்பாபு தற்போது ‘குண்டுர் காரம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தை இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தற்போது 'குண்டுர் காரம்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'குண்டுர் காரம்' திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில், இந்த படத்திலிருந்து நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பூஜா ஹெக்டேவிற்கு போதிய கால்சீட் இல்லாததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் 'வாத்தி' பட நடிகை சம்யுக்தா இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    பூஜா ஹெக்டே- சம்யுக்தா

    சமீபத்தில் 'குண்டுர் காரம்' திரைப்படத்தில் இருந்து தமன் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’.
    • இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகை அனுஷ்கா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.


    தற்போது இவர் இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் புதிய பாடலான 'என்னடா நடக்குது'பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் ராதன் வரிகளில் தனுஷ் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.




    • தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா.
    • இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

    தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா சமீபத்தில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததன் காரணமாக அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.


    மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.


    பின்னர் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார்.


    இந்நிலையில், நடிகர் மகேஷ்பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தந்தையின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,"உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது. உங்கள் மறைவு இன்னும் கொண்டாடப்படுகிறது. இதுவே உங்கள் மகத்துவம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள். துணிச்சலும் தைரியமும் உங்கள் இயல்பு. எனது உத்வேகமாக நீங்கள் இருந்தீர்கள்.


    நான் பார்த்த அனைத்தும் அப்படியே மறைந்துவிட்டன. ஆனால், இதுவரை நான் உணராத வலிமையை என்னுள் உணர்கிறேன். இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன். உங்களது ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும். உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். லவ் யூ அப்பா. மை சூப்பர் ஸ்டார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.



    • தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராஜமவுலி.
    • இவர் தனது அடுத்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார்.

    தெலுங்கில் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தனது அடுத்த படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். ஆர். ஆர். ஆர். படத்தின் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குனர் ராஜமௌலி ஈடுபட்டுள்ளார்.


     ராஜமவுலி

    மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. மேலும் இந்த படம் ஆக்‌ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.


     ராஜமவுலி

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் நரேஷ்
    • நடிகர் நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி.

    தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் நரேஷ். இவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் ஆவார். நரேஷுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில் ரம்யா ரகுபதி என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.


    நரேஷ் - ரம்யா ரகுபதி

    இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நரேஷ் – ரம்யா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசலுக்கு காரணம் நடிகை பவித்ரா லோகேஷ் தான் எனவும் நரேஷும் பவித்ரா லோகேஷும் திருமணம் செய்து கொள்ளபோவதாக தகவல் வெளியானது.

    தெலுங்கு, கன்னட மொழி படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் பவித்ரா லோகேஷ் சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படத்தில் நடிகை அபர்ணாவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    நரேஷ் - பவித்ரா லோகேஷ்

    இந்நிலையில், நரேஷும் பவித்ரா லோகேஷும் மைசூர் ஹூன்சூர் சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இதை தெரிந்துகொண்ட நரேஷின் மனைவி ரம்யா நள்ளிரவு நேரத்தில் அவர்களின் ஓட்டல் அறைக்கு சென்றுள்ளார்.

    பின்னர் பலமுறை அறை கதவை தட்டியும் திறக்காத நிலையில் ரம்யா அறை வெளியே காத்திருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட போலீசார் அங்கே வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் நரேஷ் அறை கதவை திறந்து வெளியே வந்தபோது அவரை ரம்யா செருப்பால் அடிக்க பாய்ந்துள்ளார்.


    செருப்பால் அடிக்க  முயன்ற ரம்யா

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டுள்ளனர்.

    இந்த நிகழ்வு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ×