என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharaja film"

    • மகாராஜா திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலித்தது.
    • திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு உலகளவில் உள்ள பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

    விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியானது மகாராஜா திரைப்படம். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலித்தது.

    மகாராஜா திரைப்படம் சீன மொழியிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று சர்வதேச அங்கீகாரம் பெற்றது. மேலும் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு உலகளவில் உள்ள பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

    இந்நிலையில், மகாராஜா பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய்சேதுபதி- இயக்குனர் நிதிலன் மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 20 வயசுல ஏதாவது சாதிக்க மாட்டோமா, குடும்பத்தை எப்படியாவது மேல கொண்டு வந்துவிட மாட்டோமா என்று ஒரு கனவு இருக்கும்.
    • ரூம் சுத்தம் செய்வது, சமைப்பது, பாத்ரூம் கழுவுவது இவ்வளவுதான் வாழ்க்கை.

    விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி உள்ள 50-வது திரைப்படம் 'மகாராஜா'. இந்த படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், இப்படத்தின் புரொமோசன் பணியின்போது பேசிய விஜய் சேதுபதி நடிகனாகும் முன் துபாயில் இருந்த நினைவுகளை பகிர்ந்தார். அது குறித்து அவர் பேசியதாவது,

    'இது நான் சொல்லி சொல்லி சலிச்சுப் போன கதையாக இருந்தாலும், கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். நான் ஒரு கம்பெனியில் 3,500 ரூபாய் சம்பளத்தில் அக்கவுண்டன்டாக வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போது துபாயில் வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் தருவார்கள் என்றும் என் நண்பர் ஒருவர் கூறினார்.


    என்னிடம் அப்போது பாஸ்போர்ட் கிடையாது. பாஸ்போர்ட் அப்ளை பண்ணினேன். 10 நாட்களில் செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். இதனால், ஏரியா கவுன்சிலரை பார்க்க வேண்டும், காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். என்கிட்ட சுத்தமா காசு கிடையாது. அப்போது நானே என்னோட டிகிரி சான்றிதழ், ரேஷன் கார்டு, கான்டக்ட் சான்றிதழ் எடுத்துகொண்டு நேராக கமிஷனர் ஆபிஸ் போனேன்.

    அங்க ஒரு நல்ல மனுஷன் இருந்தாரு. அவர்கிட்ட இவற்றையெல்லாம் காட்டி, "சார் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு போகிறேன், எனக்கு இந்த மாதிரி கேட்கிறார்கள், சீக்கிரம் வேண்டும் சார்" என்று கூறினேன். அங்க நிறைய பாஸ்போர்ட் அப்ளிகேஷன் வந்திருந்தது. நல்ல நேரம் அவர், அதுல என்னோட பாஸ்போர்ட் அப்ளிகேஷன் எடுத்துட்டு, அடுத்த நாள் எங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷன் போக சொன்னாரு.

    போலீஸ் ஸ்டேஷன் போனப்போ அங்க எங்கிட்ட, உங்களுக்கு கமிஷனர் ஆபிசில் ஆள் தெரியுமா என்று கேட்டாங்க. எனக்கு யாரையும் தெரியாது. ஆனா எனக்காக அவர் கால் பண்ணி சொல்லிருக்காரு. பாஸ்போர்ட் கிடைத்தது. நான் வாங்கிட்டு ஊருக்கு போனேன். ஒரு கவர் கொடுத்தாங்க. ஒரு தாத்தா வந்து கூட்டிட்டு போவாருனு சொன்னாங்க. அவருக்கு 75 வயசு எனக்கு 21 வயசு.


    அவர் வந்து என்னை கூட்டிட்டு போனாரு. வந்தா பாலைவனத்துல மழை பெய்யுது. நம்ம துபாய்ல பெரிய ஆளாக போறோம்னு நினைச்சு கனவுகளோட நான் போனேன். அப்புறம் என்னோட ஆபிசுக்கு சென்று முதலாளியை பார்த்தேன். நான் சம்பாதிச்ச பணம் குடும்ப சூழ்நிலைக்கு ஓரளவு வசதியா இருந்தது. ஆனால் நான் நினைத்த அளவுக்கு வாழ்க்கை மாறவில்லை.

    20 வயசுல ஏதாவது சாதிக்க மாட்டோமா, குடும்பத்தை எப்படியாவது மேல கொண்டு வந்துவிட மாட்டோமா என்று ஒரு கனவு இருக்கும். எதையாவது பண்ண மாட்டாமோன்னு ஏங்கிருக்கேன். அங்க கொண்டாட்டம் எல்லாம் கிடையாது. வியாழக்கிழமை என்றால் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து பிரியாணி சமைத்து சாப்பிட்டுவிட்டு, துணி எல்லாம் துவைச்சு காயப்போடுவோம்.

    ரூம் சுத்தம் செய்வது, சமைப்பது, பாத்ரூம் கழுவுவது இவ்வளவுதான் வாழ்க்கை. இதை தாண்டி கனவு காண கூட நேரம் இருக்காது. இப்போ 10 வருஷம் கழிச்சு திரும்பி அந்த இடத்தை பார்க்கும்போது, நான் அங்க ஏக்கத்தோட சுத்தின, அந்த ஞாபகங்கள்தான் எனக்கு வந்ததே தவிர, மற்ற எதுவும் எனக்கு தெரியவே இல்ல'. இவ்வாறு கூறினார்.

    • வாரந்தோறும் புது புது திரைப்படங்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.
    • ஓடிடியில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்கள் இந்த செய்தியில் பார்ப்போம்.

    வாரந்தோறும் புது புது திரைப்படங்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அனைத்து திரைப்படங்களையும் மக்கள் திரையரங்கிற்கு பார்ப்பதில்லை. அவர்களுக்கு பிடித்த படங்களை மட்டுமே மக்கள் திரையரங்கில் தேர்ந்தெடுத்து பார்க்கின்றனர். பல திரைப்படங்களை மக்கள் ஓடிடியில் வெளியான பிறகு தான் பார்க்கிறார்கள். அப்படி சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியான பிறகு மக்களின் பாராட்டை பெற்று பெரிய திரைப்படமாக மாறியுள்ளது. அதுப் போன்று இந்தாண்டு ஓடிடியில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்கள் இந்த செய்தியில் பார்ப்போம்.

    மகாராஜா {Maharaja}

    நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானது மகாராஜா திரைப்படம். இப்படம் விஜய் சேதுபதி நடிக்கும் 50 வது திரைப்படமாக அமைந்தது. அனுராக் காஷ்யப், சாச்சனா, சிங்கம்புலி, நட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிகஸ் தளத்தில் வெளியானது. திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு திரைப்படம் உலகளவில் அதன் அங்கீகாரத்தை பெற்றது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகமாக பார்த்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தற்பொழுது திரைப்படம் சீன மொழியில் டப் செய்து தற்பொழுது வெற்றிகரமாக சீனாவில் ஓடிக்கொண்டு இருக்கிறது. திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் இதுவரை ஓடிடியில் 19.7 மில்லியன் மக்கள் இதுவரை இப்படத்தை பார்த்துள்ளனர்.

    க்ரூ {Crew}

    ராஜேஷ் ஏ கிருஷ்ணன் இயக்கத்தில் தபு, கரீனா கபூர், கிருத்தி சனான், கபில் ஷர்மா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியானது க்ரூ திரைப்படம். இப்படம் விமானத்தில் பணி செய்யும் பெண்கள் அந்த விமானத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் வைரத்தை திருடும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். திரைப்படம் கடந்த மே மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரைப்படம் இதுவரை 17.9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

     

    லாப்பட்டா லேடிஸ் {Laapataa Ladies}

    இளம்பெண்கள் இருவர் தங்கள் கணவர்களிடம் இருந்து பிரிந்ததற்கான காரணங்கள் பற்றிய கதை கருவை மையமாக வைத்து லாபட்டா லேடீஸ் படத்தை அமிர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கி இருந்தார். இப்படத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பார்ஷ் ஷ்ரிவஸ்தவா, பிரதீபா ரண்டா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பலரின் கவனத்தை பெற்றது. இப்படத்தை இதுவரி ஓடிடியில் 17.1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

    டூ பட்டி {Do Patti}

    ஷஷங்கா சதுர்வேதி இயக்கத்தில் கஜோல், கிருத்தி சனோன், ஷாஹீர் செய்க் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து நேரடி ஓடிடி வெளியீட்டாக கடந்த அக்டோபர் மாதம் நேட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தை நடிகை கிருத்தி சனோன் தயாரித்தார். இதுவே இவர் தயாரித்த முதல் திரைப்படமாகும். கிருத்தி சனோன் இப்படத்தின் இரு வேடங்களில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படத்தை இதுவரை 15. மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

     

    சைத்தான் {Shaitaan}

    விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா , ஜான்கி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பில் வெளியானது சைத்தான் திரைப்படம். இப்படம் உலகளவில் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்திரைப்படம் கடந்த மே மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரைப்படம் இதுவரை ஓடிடியில் மட்டும் 14.8 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    கல்கி 2898 ஏடி {Kalki 2898 AD}

    நாக் அஷ்வின் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் உலகளவில் 1200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.

    ஸ்ரீ 2 {Stree 2}

    கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜ்குமார் ராவ் மற்றும் ஷ்ரதா கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ஸ்ரீ 2 திரைப்படம். இப்படத்தை அமர் கௌஷிக் இயக்கினார். திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று உலகளவில் இதுவரை 874 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    திரைப்படம் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி யிலும் பெரும் மக்களால் பாரக்கப்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகாராஜா படத்தின் தயாரிப்பாளர் மீண்டும் இணையவுள்ளனர்.
    • இந்த புதிய படத்தை நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் இயக்கவுள்ளார்.

    நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகாராஜா படத்தின் தயாரிப்பாளர் மீண்டும் இணையவுள்ளனர். மகாராஜா படத்தை ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது. ஆனால் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மட்டும் தயாரிக்கிறது. இந்த புதிய படத்தை நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் இயக்கவுள்ளார்.

    விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. வெறும் 30 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை இந்தியாவில் மட்டுமல்லாது சீனாவிலும் திரையிடப்பட்டது. அந்த நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீஸ் ஆனது. 92 கோடிகள் அந்த நாட்டில் மட்டும் வசூலித்தது.

    இதேபோல நேற்று இன்று நாளை என்ற படமும் சூப்பர் ஹிட் திரைப்படமாகும். தமிழில் வெளியான சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களில் முக்கிய படமாகவும், ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாகவும் நேற்று இன்று நாளை இருந்து வருகிறது.

    சயின்ஸ் பிக்சன் கதையாக இருந்தாலும் காமெடியான திரைக்கதையுடன் உருவாக்கி ரசிக்க வைத்திருப்பார் படத்தின் இயக்குநர் ஆர். ரவிக்குமார். இந்த படம் இவரது அறிமுக படமாகும்.

    இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, மகாராஜா தயாரிப்பு நிறுவனம், நேற்று இன்று நாளை இயக்குனர் ஆகிய 3 பேர் இணையும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ×