search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maha pushkaram"

    ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 (12x12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. அதன்படி இந்த ஆண்டு மகாபுஷ்கரம் நடைபெறுகிறது.
    12-10-2018 முதல் 23-10-2018 வரை

    பிரம்மதேவரின் கையில் இருந்தது தீர்த்தம் ‘புஷ்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த புஷ்கர தீர்த்தத்தை கடுமையான தவம் இருந்து பிரம்மதேவரிடம் இருந்து வரமாகப் பெற்றார், குரு பகவான். ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 (12x12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. அதன்படி இந்த ஆண்டு மகாபுஷ்கரம் நடைபெறுகிறது.

    நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள், 12 ராசிகளுக்குஉரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி விருச்சிக ராசிக்குரியதாக தாமிரபரணி நதி சொல்லப்பட்டு ள்ளது. குரு பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசியில் குரு சஞ் சரிப்பதால், தாமிரபரணியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் அவர்களின் தேவியர்கள், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பார்கள்.

    நதிகளெல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவை என்று கருதுவது நம் நாட்டு ஐதீகம் ஆகும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர்கள், அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி.

    அகத்தியரை ‘தென் நாடு செல்க’ எனக் கட்டளையிட்டார், சிவபெருமான். அதற்கு அகத்தியர், தனக்கு அங்குள்ள தமிழ் மொழியை உணர்த்தும்படி வேண்டினார். சிவபெருமானும், அகத்தியரை தன் அருகே அமர வைத்து தமிழ்மொழியைக் கற்பித்தார். பின்னர் அங்கிருந்து பொதிகைமலை வந்து அமர்ந்த அகத்தியர், கடும் தவம் செய்தார். அவர் முன் தோன்றிய சூரிய பகவான், அகத்தியருக்கு தமிழ் இலக்கணங்களை கற்றுக் கொடுத்தார்.

    இதையடுத்து முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராய் இருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். இந்த நிலையில் அகத்தியர் நீராடும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார். அந்த நதி தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அதற்கு ‘தாம்பிர வர்ணி’ என்று பெயர் வந்தது. காலப்போக்கில் அதுவே மருவி ‘தாமிரபரணி’ என்றானது.

    அகத்தியருக்காக ஈசனால் உருவாக்கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமான திருக் கோவில்கள் உள்ளன. பாபநாசம் முதல் புன்னக்காயல் (முகத்து வாரம்) வரையான இதன் கரையோரத்தில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன. இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை படித்து றையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கரத் திருவிழா தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

    திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி புஷ்கரம் ஆரம் பம். 23-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் விழா பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.

    இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. 12-ந் தேதி (வெள்ளி) - விருச்சிகம், 13-ந் தேதி (சனி)- தனுசு, 14-ந் தேதி (ஞாயிறு) - மகரம், 15-ந் தேதி (திங்கள்)- கும்பம், 16-ந் தேதி (செவ்வாய்) - மீனம், 17-ந் தேதி (புதன்) - மேஷம், 18-ந் தேதி (வியாழன்) - ரிஷபம், 19-ந் தேதி (வெள்ளி) - மிதுனம், 20-ந் தேதி (சனி) - கடகம், 21-ந் தேதி (ஞாயிறு) - சிம்மம், 22-ந் தேதி (திங்கள்) - கன்னி, 23-ந் தேதி (செவ்வாய்) - துலாம்.

    ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக் குரிய தேதி, கிழமையில் தாமிரபரணி நதியில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும். குடும்பத் தலைவரோடு தொலை தூரத் திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எது வோ, அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும். 12 நாட் களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமமானது.

    இந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய் வது சிறப்பு. தானங்களுள் ‘கோ தானம்’ முக்தியை அளிப்பதாக சொல்லப்படுகிறது. நல்ல பசுவைத் தானம் செய்வதால், மோட்ச சித்தி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இது தவிர புஷ்கரம் தங்கியிருக்கும் 12 நாட்களிலும், தாமிர பரணி நதிக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ரு தோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலுவும் பெறும். பாபநாசம் முதல் புன்னக்காயல் வரையான 143 படித்துறைகளில் எவற்றில் வேண்டுமானாலும் நீராடலாம், தானம் செய்யலாம், திதி கொடுக்கலாம்.

    சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீராடுவது மிக மிகப் புண்ணியமாகும்.

    திருமணமாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடினால் மட்டுமே நற்பலன் கிட்டும். திருமணமானவர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராட லாம். துறவு வாழ்க்கை மேற்கொள்பவர்கள் அதி காலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.

    நவக்கிரகங்களில் குரு பகவானை ‘புத்திரகாரகன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புத்திர பாக்கியத்திற்கு காரணகர்த்தா இவரே. குரு பகவானின் அனுக்கிரகம் நிரம்பப் பெற்ற தலங்களிலும், குரு பகவான் சஞ்சாரத்தால் சிறப்பு பெறும் புஷ்கர நதியிலும் நீராடினால் புத்திரப்பேறு கிடைப் பது நிச்சயம். அந்த வகையில் தாமிரபரணியில் நீராடுவது சிறந்த பலனைத் தரும். குரு திசை, குரு புத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், புஷ்கர நாளில் தாமிரபரணியில் நீராடினால் புதுவாழ்வு பூக்கும்.

    ராசிகளுக்குரிய நதிகள்

    மேஷம் - கங்கை

    ரிஷபம் - நர்மதை

    மிதுனம் - சரஸ்வதி

    கடகம் - யமுனை

    சிம்மம் - கோதாவரி

    கன்னி - கிருஷ்ணா

    துலாம் - காவிரி

    விருச்சிகம் - தாமிரபரணி

    தனுசு - சிந்து

    மகரம் - துங்கபத்ரா

    கும்பம் - பிரம்மநதி

    மீனம் - பிரணீதா
    தாமிரபரணி புஷ்கர திருவிழா நடைபெறும் 12 நாட்களும் தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. ஒருமுறை தானம் செய்தால் அது பலமடங்கு பெருகுவதாக ஐதீகம்.



    pushkaram, worship, pushkaram thamirabarani, guru peyarchi, புஷ்கரம், வழிபாடு, குருப்பெயர்ச்சி





    தாமிரபரணி புஷ்கர திருவிழா நடைபெறும் 12 நாட்களும் தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. ஒருமுறை தானம் செய்தால் அது பலமடங்கு பெருகுவதாக ஐதீகம்.

    அதன்படி விழா தொடங்கும் முதல் நாள் தங்கம், வெள்ளி, தானியங்கள், பூமி ஆகியவற்றை தானமாக வழங்கலாம். 2-ம் நாள் வஸ்திரம் (துணி), உப்பு, மாடு, ரத்தினம். 3-ம் நாள் வெல்லம், காய்கறிகள், குதிரை, பழங்கள், வண்டி, 4-ம் நாள் நெய், எண்ணெய், தேன், பால். 5-ம் நாள் எருமை, காளை. 6-ம் நாள் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், வாசனை திரவியங்கள். 7-ம் நாள் வீடு, மனை, நாற்காலி, கிழங்கு, இஞ்சி. 8-ம் நாள் சந்தனக்கட்டை, பூக்கள். 9-ம் நாள் மஞ்சள். 10-ம் நாள் புத்தக தானம். 11-ம் நாள் யானை, குதிரை. 12-ம் நாள் எள், ஷோடசதானங்கள் ஆகியவற்றை வழங்கலாம்.

    காவிரியில் அந்திம புஷ்கர விழா

    புஷ்கரமானவர் குருபெயர்ச்சி சமயத்தில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் வாசம் செய்கிறார். குருபெயர்ச்சி ஆரம்பித்து முதல் 12 நாட்கள் ஆதிபுஷ்கரம் என்றும், அடுத்த குருபெயர்ச்சிக்கு முன்புள்ள 12 நாட்கள் அந்திம புஷ்கரம் என்றும் கொண்டாடப்படுகிறது. சென்ற வருடம் துலாம் ராசிக்கு அதிபதியான காவிரியில் ஆதிபுஷ்கரமானது 12-9-2017 முதல் 24-9-2017 வரை 12 நாட்கள் மயிலாடுதுறை துலா கட்டத்தில் கொண்டாடப்பட்டது.

    அந்திம புஷ்கர விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 11-10-2018 வரை 12 நாட்கள் காவிரியில் கொண்டாடப்பட உள்ளது. மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரியில் அந்திம புஷ்கர விழா 8-10-2018, 9-10-2018 ஆகிய தேதிகளில் வேதபாராயணத்துடன், சிறப்பு பூஜையுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி கோவில்கள் மற்றும் ஆற்றில் அழைப்பிதழை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா வருகிற 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் மகா புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    துறவிகள் சார்பில் மகா புஷ்கர விழாவுடன் மகா சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த விழா, மாநாட்டுக்கான அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டு உள்ளது. அந்த விழா பத்திரிகை நேற்று பாபநாசம் கோவில், நெல்லையப்பர் கோவிலில் சுவாமி, அம்பாள் முன்னிலையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    மேலும் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம் முன்பு தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அழைப்பிதழை வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் ஆற்றில் மலர் தூவி ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் விழா அழைப்பிதழ் மீது தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு ஆகியவை வைத்து ஆற்றில் விடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனமும் அகில பாரத துறவிகள் சங்க தலைவருமான சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், செயலாளர் ராமானந்தா சுவாமி, பெரம்பலூர் பிரம்மரிஷி மலை சித்தர் சாமி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கூறியதாவது:- 12 ராசிகளுக்கு ஏற்ப 12 நதிகளில் குருபெயர்ச்சியையொட்டி புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. அதில் தமிழகத்தில் 2 நதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மயிலாடுதுறை ஆற்றில் காவிரி புஷ்கர விழா விழா கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு பொதிகை மலையில் உற்பத்தியாகி வங்க கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    விழாவில் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து துறவிகள், ஆதீனம், மடாதிபதிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையினர் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இந்த விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அகில இந்திய துறவிகள் சங்கத்தின் சார்பில் நடைபெறுகின்ற தாமிரபரணி மகாபுஷ்கர விழா அழைப்பிதழ் மற்றும் இணையதளம் வெளியீட்டு விழா நேற்று மாலையில் நெல்லை சந்திப்பில் நடந்தது. துறவிகள் சங்க செயலாளர் ராமானந்தாசுவாமிகள் தலைமை தாங்கினார். தலைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், அழைப்பிதழை வெளியிட்டார். டாக்டர் சிவராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இதில் சாராதா கல்லூரி தாளாளர் பக்தானந்தா சுவாமிகள், திருப்பாதசுவாமிகள், மன்னார்குடி ஜீயர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    திக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகா புஷ்கர விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
    விருச்சிக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடையும்போது நடக்கும் நிகழ்ச்சி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் ஆலய தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் 144 ஆண்டுகளுக்கு பின்னர் மகா புஷ்கரவிழா நடக்கிறது.

    இந்த விழா வருகிற 12-ந்தேதி(அக்டோபர்) தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று திக்குறிச்சி மகாதேவர் ஆலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழாக்குழு ஒருகிணைப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். திருகயிலை சிவனடியார்கள் கூட்ட தலைவர் ஜெயந்தி வெள்ளத்துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிவனடியார்கள் கூட்ட துணைத்தலைவர் பார்வதி, செயலாளர் அனிதா பாண்டியன், துணை செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் கீதா ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் குழிச்சல் செல்லன், பா.ஜனதா மாநில விவசாய அணி செயலாளர் ரவீந்திரன் மற்றும் திக்குறிச்சி மகாதேவர் ஆலய பக்தர்கள் சேவா சங்க செயலாளர் சசிகுமார், வினோத், கிராம கோவில் கூட்டமைப்பு செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    விழா நடக்கும் 12 நாட்களும் தாமிரபரணி ஆற்றில் ஹோமங்கள், முன்னோர்கள் நினைவு தர்ப்பணம், கோ தானம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவை வெள்ளிமலை சைதன்யானந்தஜி தொடங்கி வைக்கிறார்.

    நிறைவு நாள் விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், கல்லிடைகுறிச்சி பரமாசாரிய சுவாமிகள், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த விழா 144 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படுகிறது. இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். எனவே பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை குறுக்குத்துறை-தைப்பூச மண்டபத்தில் தாமிரபரணி புஷ்கர விழா வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி அறிவித்துள்ளார்.
    செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தாமிரபரணி நதிக்கரையில் பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சார்பில் தாமிரபரணி புஷ்கர வழிபாடு மேற்கொள்வதற்கு கோவில்களுக்கு சொந்தமான மண்டபங்கள் மற்றும் படித்துறைகள், கோவில் வளாகங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புஷ்கர விழா நடத்த அதிகமான பக்தர்கள் செல்ல போதுமான பாதை வசதி இல்லை. அதிகமான பக்தர்கள் கூடுவதற்கு இடவசதியும் இல்லை. பருவமழைகாலத்தில் ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்லும்போது நீராடுபவர்களை பாதுகாப்பது சிரமம் என்றும், அந்த பகுதி நெரிசலான பகுதி என்பதால் அந்த இடத்தில் புஷ்கர விழா நடத்த இயலாது என்றும் கலெக்டர் தெரிவித்து உள்ளார். எனவே, அந்த இடத்தில் தாமிரபரணி புஷ்கர விழா வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் நெல்லை சந்திப்பில் உள்ள பிள்ளையன்கட்டளைக்கு சொந்தமான தைப்பூச மண்டபம் மற்றும் அந்த பகுதியில் உள்ள படித்துறைகள் மிகவும் பழமையானது ஆகும். அந்த பகுதியில் உள்ள ஆறு மிகவும் ஆழமானது என்பதாலும், நீர்ச்சுழல் உள்ள பகுதி என்பதாலும் அந்த இடத்திலும் புஷ்கர விழா வழிபாடு நடத்த அனுமதி கிடையாது. எனவே, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் மண்டபம் மற்றும் படித்துறைகளை புஷ்கர விழா வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி ஆன்மிக அமைப்புகளுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என கோவில் நிர்வாகிகளுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    புஷ்கர விழாவிற்காக கோவிலில் இருந்து சுவாமி எழுந்தருள செய்வது ஆகமவிதிகளுக்கு மாறானது ஆகும். எனவே கோவில்களில் தொன்று தொட்டு உள்ள பழக்க வழக்கத்திற்கு மாறாக சுவாமி எழுந்தருள செய்வது போன்றவை கூடாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

    தாமிரபரணி புஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி தொடங்கி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் இந்த விழா 18 இடங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையில் நடக்கிறது. இதற்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கிறது. நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ளதால் அங்கு புஷ்கர விழாவிற்கு வந்து நீராடுபவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதேபோல் தைப்பூச மண்டபம் மற்றும் அதன் அருகில் உள்ள படித்துறைகளிலும் ஆழம் அதிகமாக உள்ளதால் அங்கு குளிக்க வருகின்ற பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆகவே இந்த 2 இடங்களில் மட்டும் புஷ்கர விழா வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது. மற்ற இடங்களில் வழக்கம்போல் புஷ்கர விழா நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    தாமிரபரணி புஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கும், புனித நீராடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் மற்றும் அமைச்சர்கள், மத்திய மந்திரிகள், துறவிகள் உள்பட இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகள் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் தாமிரபரணி புஷ்கர விழா சிறப்பாக நடைபெறவேண்டி நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறையில் நேற்று சிறப்பு ஆரத்தி விழா நடந்தது. இதில் துறவிகள் சங்க செயலாளர் ராமானந்தா சுவாமிகள், செண்பக மன்னார் ஜீயர், நாராயண ஜீயர், வேதானந்த மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தாமிரபரணி நதிக்கு பால், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்து ஆரத்தி காட்டினார்கள்.

    இந்த ஆரத்தி விழாவில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாமிரபரணி நதிக்கு ஆரத்தி காட்டினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வர உள்ளனர். எனவே இந்த புஷ்கர விழாவுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்கவேண்டும். இது சாதி, மதம், மொழி பார்த்து நடக்கும் விழா இல்லை. இந்த விழா நமது தாமிரபரணிக்கு நடக்கிற விழா. எனவே இந்த விழாவை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட வேண்டும். இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். புஷ்கர விழாவுக்கு வருகிறவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி பாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் வைத்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெறும். அதன்படி வருகிற அக்டோபர் 11-ந் தேதி தொடங்கி, 22-ந் தேதி வரை புஷ்கர விழா நடைபெற உள்ளது. 149 தீர்த்த தலங்களில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்கான முயற்சிகளை அகில பாரத துறவியர் சங்கம் மற்றும் தாமிரபரணி புஷ்கர கமிட்டியினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அகஸ்தியர், தாமிரபரணி தேவி சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுக்கு பாளையங்கோட்டையில் உள்ள சிருங்கேரி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பார்த்ததீர்த்த சுவாமி தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன. பின்னர் அங்கிருந்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ரத யாத்திரை ஊர்வலத்தில் பல ஊர்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் நெல்லைக்கு வந்தது.

    நெல்லை மாநகரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று பாளையங்கோட்டையில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலுக்கு இந்த சிலைகள் எடுத்து செல்லப்பட்டது. அங்கு இந்த சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    நெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    நெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசும், துறவிகள் கூட்டமைப்பும் செய்து வருகிறார்கள்.

    இதற்காக அரசு சார்பாகவும் பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் தாமிரபரணி நதிக்கரையை சுத்தப்படுத்தும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. தாமிரபரணி நதியில் புஷ்கர விழா கொண்டாடுவது தொடர்பாக அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் மற்றும் அதிகாரிகளும் பல்வேறு இடங்களை சுற்றி பார்வையிட்டனர். புஷ்கர விழாவிற்காக தாமிரபரணி நதி கரையில் படித்துறைகள், தாமிரபரணிதேவி சிலை உள்பட பல அடிப்படை கட்டமைப்புகள் கட்ட வேண்டும் என்றும் துறவிகள் கூட்டமைப்பினர் அரசிடம் மனு கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் துறவிகள் கூட்டமைப்பு மற்றும் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் சார்பாக அருகன்குளத்தில் உள்ள தாமிரபரணி நதியின் ஜடாயு தீர்த்த கட்டத்தில் படித்துறை கட்ட பூமிபூஜை இன்று காலை நடந்தது.


    நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த கட்டத்தில் படித்துறை கட்ட துறவிகள் பூமி பூஜை நடந்தபோது எடுத்தபடம்.

    இதில் நாங்குநேரி வானமாமலை ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமான் ஜீயர், கொங்கு மண்டல நாராயணஜீயர், திருச்சி ஸ்ரீரங்கம் பவுன்புகரபுரம் ஜீயர், பெருங்குளம் செங்கோல் ஆதினம், துறவிகள் சங்க தலைவர் ராமானந்தா சுவாமிகள், நெல்லை பக்தானந்த சுவாமி மற்றும் எட்டெழுத்து பெருமாள் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து பூமிபூஜையை நடத்தினர்.

    பின்னர் ஜடாயு தீர்த்தத்தில் தண்ணீர் தெளித்து பல்வேறு அடிப்படை பணிகளுக்கான தொடக்க விழாவையும் நடத்தினர்.

    இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லைக்கு வந்த தாமிரபரணி புஷ்கர விழா விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெறும். அதன்படி வருகிற அக்டோபர் 11-ந் தேதி தொடங்கி, 22-ந் தேதி வரை புஷ்கர விழா நடைபெற உள்ளது. 149 தீர்த்த தலங்களில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்கான முயற்சிகளை அகில பாரத துறவியர் சங்கம் மற்றும் தாமிரபரணி புஷ்கர கமிட்டியினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த விழா குறித்து பொதுமக்ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அகஸ்தியர், தாமிரபரணி தேவி சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுக்கு பாளையங்கோட்டையில் உள்ள சிருங்கேரி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பார்த்ததீர்த்த சுவாமி தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன.

    பின்னர் அங்கிருந்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ரத யாத்திரை ஊர்வலம் புறப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஓசூர், ஒகேனக்கல், பென்னகரம் வழியாக சேலம் சென்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மல்லசமுத்திரம், திருசெங்கோடு, திண்டுக்கல் வழியாக மதுரை வந்தது.


    நெல்லையில் தாமிரபரணி புஷ்கர விழா விழிப்புணர்வு ரதயாத்திரை ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.

    அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், தென்காசி, ஆலங்குளம் வழியாக நேற்று மாலை நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை வந்தடைந்தது.

    கோவிலில் தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் வீதி உலா நடந்தது. பின்னர் அந்த சிலைகள் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டன. இந்த ரத யாத்திரைக்கு பக்தர்கள் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ரத யாத்திரை நெல்லை டவுன் 4 ரத வீதிகளையும் சுற்றி வந்தது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு பாபநாசம் சென்றது.

    இந்த ரதயாத்திரை வரவேற்பு நிகழ்ச்சியில் தாமிரபரணி புஷ்கர கமிட்டி தலைவர் சுவாமி ராமாந்தா, செயலாளர் முத்தையா, ஒருங்கிணைப்பு குழு செயலாளர் குமாரராஜா, துணை தலைவர் ரத்தினவேல், பொருளாளர் வீரபாகு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தாமிரபரணி புஷ்கர விழா குழுத்தலைவர் சென்னையை சேர்ந்த மகாலெட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புஷ்கர திருவிழா என்பது குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் தீர்த்த திருவிழா ஆகும். 3½ கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குருபெயர்ச்சி சமயத்தில் அந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாட்கள் பிரவேசம் செய்கிறார்.

    குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயரும்போது விருச்சிக ராசிக்கு உரிய நதியான தாமிரபரணி நதியில் வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை புஷ்கரமானவர் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் என்று புராணங்கள் கூறுகிறது. இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதால் மகா புஷ்கரம் என்று கூறப்படுகிறது.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, அதேபோன்று தாமிரபரணி நதியை நினைத்தால், தரிசித்தால், ஸ்நானம் செய்தால், தீர்த்தத்தை பருகினால் எல்லா பாவங்களும் அகன்று முக்தி பெறலாம் என்று தாமிரபரணி மகாத்மியம் புகழ்கிறது.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட தாமிரபரணி நதிக்கரையில் 12 இடங்களில் இந்த மகா புஷ்கர விழா பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தாமிரபரணி மகா புஷ்கர விழா 12.10.2018 அன்று காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துகுமார சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் உள்ளிட்ட ஆதீன கர்த்தர்கள் முன்னிலையில் நடக்கிறது.

    விழாவில் அமைச்சர்கள், நெல்லை மாவட்ட கலெக்டர், அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சமய சான்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை தாமிரபரணி புஷ்கர விழாக்குழு சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×