என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "madras day"
- சென்னையில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழாவுக்கும் மாநகராட்சி ஏற்பாடு.
- கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு.
ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை தினத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டியுள்ள சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வௌிப்படுத்தும் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர, ஆக. 21-ம் தேதி அன்று சென்னையில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழாவுக்கும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 22, 2018
பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு
ஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு
என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்
இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் #MadrasDay@ChennaiIPLpic.twitter.com/pvtU5Fd9N5
தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக சென்னை மாநகரம் திகழ்கிறது. இது இந்தியாவில் உள்ள 4 முக்கிய நகரங்களில் ஒன்று.
எப்போதும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சென்னை, விண்ணை முட்டும் உயரத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள், மேம்பாலங்கள், மெட்ரோ ரெயில் சேவை, துறைமுகம், விமான நிலையம், தொழில் நுட்ப பூங்கா என அதிநவீன நகரமாக புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
வரலாற்று பாரம்பரியம் மிக்க சென்னை மாநகரம் 379-ம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி உதயமானது. அதற்கு அடிக்கோலாக திகழ்ந்தவர் பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர். இவர் கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டாக இருந்தார்.
இன்று தலைமை செயலகம் இயங்கி கொண்டிருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியை முதன் முதலாக விலைக்கு வாங்கினார். அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதை சுற்றி குடியிருப்புகள் உருவானது.
மதராச பட்டணம் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதி படிப்படியாக குடியிருப்புகளால் விரிவடைந்து மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், திருவான்மியூர், ராயபுரம், திருவொற்றி யூர் என சிறு சிறு கிராமங்கள் உருவாகியது. பின்னர் அவை நகரங்களாக மாறியது.
இதற்கிடையே வடக்கு பகுதி மதராசபட்டணம் என்றும், தெற்கு பகுதி சென்னை பட்டணம் என்றும் அழைக்கப்பட்டது. வர்த்தகம் பெருகி மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இக்கால கட்டத்தில் 1856-ம் ஆண்டு ராயபுரத்தில் முதல் ரெயில் நிலையம் உதயமானது. அதை தொடர்ந்து சென்னை நகரம் வளர்ச்சியால் விரிவடைய தொடங்கியது. பிழைப்பு தேடி மக்கள் இங்கு வந்து குவிய தொடங்கினர்.
மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்க சொத்துக்களை வாங்க தொடங்கினர். இன்று சென்னை மாநகரில் சொந்தமாக வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் வாங்குவது அனைவரின் கனவாக உள்ளது. இன்று ஒரு கிரவுண்டு வீட்டு மனையின் விலை பல லட்சம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாயை தாண்டி விற்கிறது.
இதற்கான பத்திரம் 3 பக்கம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. நிலத்தை விற்ற கைலாச ஆரோக்கிய முதலி தமிழில் கையெழுத்திட்டு இருக்கிறார்.
இதற்கிடையே கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகள் இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு மெட்ராஸ் மாகாணத்தில் 1865-ம் ஆண்டில் பத்திர பதிவு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டு ஒரு முழுவடிவம் பெற்றது. கர்னல் ராபர்ட் மகன்சி மெக்டொனால்டு இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதிவாளர் ஆனார்.
அதை தொடர்ந்து மெட்ராஸ் மாகாணத்தில் 50 சப்-ரிஜிஸ்திரார் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் மிகவும் பழமையானது பாரிமுனையில் உள்ள அலுவலகமாகும். இங்குதான் முதல் முறையாக நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அக்கால கட்டத்தில் தொடங்கப்பட்டவைகளில் மயிலாப்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை சப்-ரிஜிஸ்திரார் அலுவலகங்களும் அடங்கும்.
அன்றைய கால கட்டத்தில் அழகிய கையெழுத்துடன் கூடிய பத்திரப்பதிவு நடந்தது. பசை கலந்த பருத்தி இழையிலான காகிதத்தில் எழுதப்பட்டது. இதனால் அவற்றின் தரம் இன்னும் குறையவில்லை. இன்றுவரை எழுத்துக்கள் அழியாமல் அப்படியே இருக்கின்றன. #MadrasDay #ChennaiDay
அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மதராசன் என்றும், அந்த நபரின் பெயரை வைத்தே, மதராசப்பட்டணம் என்று பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், வேறொரு பெயர் காரணமும் கூறப்படுகிறது. அதாவது, சாந்தோமில் வசித்து வந்த போர்த்துகீசியர்களின் ‘மாத்ரா’ என்னும் செல்வாக்குமிகுந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணுடன் பிரான்சிஸ் டே காதல் வயப்பட்டிருந்தார் என்றும், தனது காதலியின் குடும்பப் பெயரை வைத்தே இந்தப் பெயர் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல், எழும்பூரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கும், கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம், சந்திரகிரி ராஜாவுக்கு சொந்தமானது என்றும், அதை வாங்க தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்கள் தங்களின் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை புதிய குடியிருப்பு பகுதிக்கு வைத்தால், கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுப்பதாக தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு சம்மதித்த பிறகே, பட்டா எழுதிக் கொடுக்கப்பட்டதாகவும், உறுதியளித்தபடி சென்னப்பட்டணம் என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. #MadrasDay #ChennaiDay
‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம் தான், கருணாநிதியின் நினைவுகளை போற்றி மகிழ்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ந் தேதியான இன்று (புதன்கிழமை) சென்னை தினமாக (மெட்ராஸ் டே) கடைப்பிடிக்கிறார்கள். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டதன் நினைவாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னை என்பது பிரிட்டிஷார் இங்கு வருவதற்கு முன்பே சிறந்து விளங்கிய நெய்தல் நிலம். மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கு வாழ்வுரிமை அளித்த மண். இத்தகைய பெருமை மிகுந்த சென்னையை தலைநகராக்கினார்கள் ஆங்கிலேயர்கள்.
சென்னை மாகாணம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தார், தி.மு.க.வின் முதல் முதல்-அமைச்சரான அண்ணா, தலைநகர் சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார். அத்துடன், மெரினா கடற்கரையில் தமிழ்ச் சான்றோர்களுக்கு சிலை அமைத்து தமிழ்-தமிழர்களின் பெருமையை சென்னை வாயிலாக உலகம் முழுவதும் அறியச் செய்தார்.
அவரை தொடர்ந்து, முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்று, தமிழ்நாட்டில் 5 முறை முதல்-அமைச்சராக அதிக காலமான 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவரான கருணாநிதி, சென்னை என தமிழிலும், மெட்ராஸ் என ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, ‘சென்னை’ என அனைத்து மொழிகளும் ஏற்றுப் பயன்படுத்திடும் வகையில், பெயர் மாற்றம் செய்து வரலாறு படைத்தார்.
திராவிட இயக்க வரலாற்றில் சென்னை மாநகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. திராவிடர் சங்கம், நீதிக்கட்சி ஆகியவை தொடங்கப்பட்ட மாநகரம் இது. முதல் இந்தி எதிர்ப்பு போரில் (1938) சென்னையில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறைப்பட்டு உயிரிழந்தது சென்னையில் தான். அண்ணா முதன் முதலில் சிறை கண்டதும் சென்னையில் தான். திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க.வை அவர் தொடங்கியதும் இதே சென்னையில் தான்.
அவர் வழியில் வந்த கருணாநிதி, அண்ணா நகர், அண்ணா சதுக்கம், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா மேம்பாலம், டைடல் பூங்கா, செம்மொழிப் பூங்கா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என காலத்திற்கேற்ற நவீனமான வளர்ச்சியுடன் கூடிய வரலாற்று சிறப்புமிக்க அடையாளங்களை உருவாக்கினார்.
கருணாநிதியால் சென்னை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்ற நான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்ற பெயரினைப் பெறும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்த நல்வாய்ப்பில்தான் சென்னையின் புதுயுக அடையாளங்களாக விளங்கும் மேம்பாலங்கள், கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.
மாநகராட்சி பள்ளிகளில் கணினி வசதிகள் கொண்டுவரப்பட்டன. சென்னையின் முகமும், முகவரியும் புதுமையான வலிவும், பொலிவும் பெற்றன. வரலாற்றின் அந்த பொன்னேடுகளை நினைவுகூர்ந்து, சென்னை தினத்தை கடைப்பிடிப்போம். ‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான். அதன் பின்னணியில் மிளிரும் கருணாநிதியின் நினைவுகளை என்றும் போற்றி மகிழ்வோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MadrasDay #ChennaiDay #MKStalin
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்