search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai day"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.
    • நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை.

    சென்னையின் 383-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.

    இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையின் 383-வது தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து.
    • சென்னையின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்துள்ளது.

    சென்னையின் 383-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினத்தையொட்டி கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகராட்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

    இந்நிலையில், சென்னை தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், " சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மற்றும் ஊக்கப்படுத்தியது " என தனது வாழ்த்துகளை தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    மெட்ராஸ் தினத்தை ஒட்டி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #MadrasDay #HarbhajanSingh @ChennaiIPL @harbhajan_singh

    சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைப்பார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவரின் தமிழ் ட்வீட்டுக்கு லைக்ஸ்கள் குவியும்.

    இந்நிலையில், மெட்ராஸ் தினத்தை ஒட்டி ஸ்பெஷல் வாழ்த்து ஒன்றை அவர் தெரிவித்துள்ளார். அதில், 

    கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு
    பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு
    ஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு 
    என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்
    இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள் 
    வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் 

    என ஹர்பஜன் சிங் ட்வீட்டியுள்ளார். 




    சென்னையில் 1865-ம் ஆண்டில் நடந்த முதல் பத்திரப்பதிவில் 2750 சதுர அடி வீட்டுமனையின் விலை ரூ.500 தான் என தெரியவந்துள்ளது. #MadrasDay #ChennaiDay
    சென்னை:

    தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக சென்னை மாநகரம் திகழ்கிறது. இது இந்தியாவில் உள்ள 4 முக்கிய நகரங்களில் ஒன்று.

    எப்போதும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சென்னை, விண்ணை முட்டும் உயரத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள், மேம்பாலங்கள், மெட்ரோ ரெயில் சேவை, துறைமுகம், விமான நிலையம், தொழில் நுட்ப பூங்கா என அதிநவீன நகரமாக புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

    வரலாற்று பாரம்பரியம் மிக்க சென்னை மாநகரம் 379-ம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி உதயமானது. அதற்கு அடிக்கோலாக திகழ்ந்தவர் பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர். இவர் கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டாக இருந்தார்.

    இன்று தலைமை செயலகம் இயங்கி கொண்டிருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியை முதன் முதலாக விலைக்கு வாங்கினார். அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதை சுற்றி குடியிருப்புகள் உருவானது.

    மதராச பட்டணம் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதி படிப்படியாக குடியிருப்புகளால் விரிவடைந்து மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், திருவான்மியூர், ராயபுரம், திருவொற்றி யூர் என சிறு சிறு கிராமங்கள் உருவாகியது. பின்னர் அவை நகரங்களாக மாறியது.

    இதற்கிடையே வடக்கு பகுதி மதராசபட்டணம் என்றும், தெற்கு பகுதி சென்னை பட்டணம் என்றும் அழைக்கப்பட்டது. வர்த்தகம் பெருகி மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    இக்கால கட்டத்தில் 1856-ம் ஆண்டு ராயபுரத்தில் முதல் ரெயில் நிலையம் உதயமானது. அதை தொடர்ந்து சென்னை நகரம் வளர்ச்சியால் விரிவடைய தொடங்கியது. பிழைப்பு தேடி மக்கள் இங்கு வந்து குவிய தொடங்கினர்.

    மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்க சொத்துக்களை வாங்க தொடங்கினர். இன்று சென்னை மாநகரில் சொந்தமாக வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் வாங்குவது அனைவரின் கனவாக உள்ளது. இன்று ஒரு கிரவுண்டு வீட்டு மனையின் விலை பல லட்சம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாயை தாண்டி விற்கிறது.

    இந்த நிலையில் சென்னையில் முதன் முறையாக நிலம் மற்றும் வீட்டுமனை விற்பனை முதன் முறையாக 19-ம் நூற்றாண்டில் தொடங்கியது. அதை தொடர்ந்து சென்னை மாகாணத்தில் கடந்த 1865-ம் ஆண்டில் ராயபுரத்தில்தான் முதன் முறையாக நிலம் விற்பனை செய்யப்பட்டு பாரிமுனை அலுவலகத்தில் பத்திர பதிவு நடந்தது.


    இங்கு 1865-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முதல் பத்திர பதிவு நடந்தது. கைலாசம் ஆரோக்கிய முதலி என்பவர் விக்டோரியா பி கம்பெனி மெட்ராஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு 2,750 சதுர அடி (1 கிரவுண்டு மற்றும் 352 சதுர அடி) நிலத்தை வெறும் 500 ரூபாய்க்கு விற்பனை செய்தார்.

    இதற்கான பத்திரம் 3 பக்கம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. நிலத்தை விற்ற கைலாச ஆரோக்கிய முதலி தமிழில் கையெழுத்திட்டு இருக்கிறார்.

    இதற்கிடையே கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகள் இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு மெட்ராஸ் மாகாணத்தில் 1865-ம் ஆண்டில் பத்திர பதிவு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டு ஒரு முழுவடிவம் பெற்றது. கர்னல் ராபர்ட் மகன்சி மெக்டொனால்டு இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதிவாளர் ஆனார்.

    அதை தொடர்ந்து மெட்ராஸ் மாகாணத்தில் 50 சப்-ரிஜிஸ்திரார் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் மிகவும் பழமையானது பாரிமுனையில் உள்ள அலுவலகமாகும். இங்குதான் முதல் முறையாக நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அக்கால கட்டத்தில் தொடங்கப்பட்டவைகளில் மயிலாப்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை சப்-ரிஜிஸ்திரார் அலுவலகங்களும் அடங்கும்.

    அன்றைய கால கட்டத்தில் அழகிய கையெழுத்துடன் கூடிய பத்திரப்பதிவு நடந்தது. பசை கலந்த பருத்தி இழையிலான காகிதத்தில் எழுதப்பட்டது. இதனால் அவற்றின் தரம் இன்னும் குறையவில்லை. இன்றுவரை எழுத்துக்கள் அழியாமல் அப்படியே இருக்கின்றன. #MadrasDay #ChennaiDay
    மதராசப்பட்டணம், சென்னப்பட்டணம் பெயர் சூட்டப்பட்ட காரணங்களை விரிவாக பார்க்கலாம். #MadrasDay #ChennaiDay
    செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியை கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டான பிரான்சிஸ் டே வாங்கியபோது, அதன் அருகில் சில மீனவ குடும்பங்களும், இரு பிரெஞ்சு கத்தோலிக்க பாதிரியார்களும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மதராசன் என்றும், அந்த நபரின் பெயரை வைத்தே, மதராசப்பட்டணம் என்று பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில், வேறொரு பெயர் காரணமும் கூறப்படுகிறது. அதாவது, சாந்தோமில் வசித்து வந்த போர்த்துகீசியர்களின் ‘மாத்ரா’ என்னும் செல்வாக்குமிகுந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணுடன் பிரான்சிஸ் டே காதல் வயப்பட்டிருந்தார் என்றும், தனது காதலியின் குடும்பப் பெயரை வைத்தே இந்தப் பெயர் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    அதேபோல், எழும்பூரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கும், கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம், சந்திரகிரி ராஜாவுக்கு சொந்தமானது என்றும், அதை வாங்க தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்கள் தங்களின் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை புதிய குடியிருப்பு பகுதிக்கு வைத்தால், கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுப்பதாக தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு சம்மதித்த பிறகே, பட்டா எழுதிக் கொடுக்கப்பட்டதாகவும், உறுதியளித்தபடி சென்னப்பட்டணம் என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  #MadrasDay #ChennaiDay
    வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரின் 379-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. #MadrasDay #ChennaiDay
    பிழைப்புத் தேடி திக்குக்தெரியாமல் வந்து சேர்ந்தவர்களுக்கு வாழ்வு கொடுக்கிற வள்ளல் நகரம் சென்னை.

    தமிழகத்தின் இன்றைய மொத்த மக்கள்தொகையில் (சுமார் 7½ கோடி), ஒரு கோடி பேர் தலைநகர் சென்னையில் தான் காலம் தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.

    தூங்கா நகரம்போல் எப்போதும் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சென்னை, உயர்ந்த கட்டிடங்கள், மேம்பாலங்கள், மெட்ரோ ரெயில் சேவை என நவீன நகரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் 4 முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகவும் உள்ள சென்னை மாநகருக்கு நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரிய பின்னணி இருக்கிறது.

    379 ஆண்டுகளுக்கு முன்பு (அதாவது 1639-ம் ஆண்டு) இதே நாளில் தான் (ஆகஸ்டு 22) சென்னை மாநகரம் உதயமாவதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.

    அதைச் செய்தவர் பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர். கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டான இவர், இன்றைக்கு தலைமைச் செயலகம் இயங்கிக் கொண்டிருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியை விலைக்கு வாங்கினார்.

    அன்றைய தினமே சென்னையின் உதய நாளாக கணக்கிடப்படுகிறது.

    அந்த இடத்தில்தான் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள். அதன் பிறகு, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அவை மதராசப்பட்டணம் என்று அழைக்கப்பட்டது.

    மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், திருவான்மியூர், திருவொற்றியூர் என்று சிறு, சிறு கிராமங்களாக உதயமாகி, நகரமாக உருவெடுத்தபோது, வடக்கே இருந்த பகுதிகள் மதராசப்பட்டணம் என்றும், தெற்கே இருந்த பகுதிகள் சென்னப்பட்டணம் என்றும் இருவேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டன.

    பின்னர், காலப்போக்கில் இரண்டு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ‘மதராஸ்’ என்று ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.

    அந்த நேரத்தில், மதராஸ் நகரம் பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டியது இருந்தது.

    அதாவது, 1702-ம் ஆண்டு முகலாயர்களாலும், 1741-ம் ஆண்டு மராட்டியர்களாலும் தாக்குதலுக்கு உள்ளானது. 1746-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது. பின்னர், அவர்களிடம் இருந்து மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் சென்றது. 1758-ம் ஆண்டு திரும்பவும் பிரெஞ்சுக்காரர்களின் கைகளுக்குப் போனது.

    இப்படியே கையில் சிக்கிய பந்தாக இங்கேயும், அங்கேயுமாக சிக்கித் தவித்தது. அடுத்த 2 மாதத்திற்குள் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் திரும்பியது. அதன் பிறகு, 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர்கள் வசமே மதராஸ் நகரம் தொடர்ந்து இருந்தது.

    ஆங்கிலேயர்கள் சென்னையில் கால்பதித்ததற்கு முக்கிய காரணமாக அடையாறு, கூவம் ஆகிய 2 நதிகள் கூறப்படுகின்றன.

    இன்றைக்கு இந்த 2 நதிகளின் பெயரைக் கேட்டாலே மூக்கைப் பிடித்துக்கொள்ளும் நிலை இருந்தாலும், அன்றைக்கு தெளிவான நீரோட்டம் கொண்ட அழகிய நதிகளாகவே அவை இருந்துள்ளன.

    மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கிய இந்த 2 நதிகளிலும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான படகு போக்குவரத்தும் நடந்து வந்திருக்கிறது.

    வர்த்தகம் பெருகி மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியபோது, போக்குவரத்தை கட்டமைப்பதில் ஆங்கிலேயர்கள் முக்கிய கவனம் செலுத்தினர்.

    அந்த வகையில், 1856-ம் ஆண்டு முதல் ரெயில் நிலையமாக ராயபுரம் உதயமானது. அதன் பின்னர், பார்க் டவுன் (இன்றைய பூங்கா நகர்), தொடர்ந்து சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் கட்டமைக்கப்பட்டன.



    நகரின் உட்பகுதியில், மாட்டு வண்டியும், குதிரை வண்டியும் மக்களின் போக்குவரத்துக்கு ஆதாரமாக இருந்த நிலையில், 1895-ம் ஆண்டு டிராம் வண்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும் இந்த வண்டிகள், தங்க சாலை (மின்ட்), கடற்கரை சாலை, மவுண்ட் ரோடு (அண்ணா சாலை), பாரிஸ் கார்னர் (பாரிமுனை) உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக டிராம் வண்டிகளின் சேவையையே சென்னை நகர மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    சென்னையில் ஓடிய டிராம் வண்டி.

    இன்றைக்கு வேப்பேரியில் உள்ள பெரியார் திடல், தினத்தந்தி அலுவலகம் இருக்கும் இடத்தில்தான், அன்றைக்கு டிராம் வண்டிகளின் பணிமனை இயங்கியது.

    அந்தக்காலத்தில், இங்கிலாந்தில் இருந்து வியாபாரத்திற்காக கொண்டுவரப்படும் பொருட்கள், கடல் வழியாக கப்பல்கள் மூலமே எடுத்துவரப்பட்டுள்ளன. ஆனால், அந்த நாளில் இங்கே துறைமுகம் எதுவும் கிடையாது என்பதால், நடுக்கடலில் கப்பல்களை நிறுத்திவைத்துவிட்டு, இங்கிருந்து படகுகளில் சென்றே கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை ஏற்றிவந்துள்ளனர்.

    ஆனால், காற்று அதிகமாக வீசும்போதோ அல்லது கடலில் ராட்சத அலைகள் எழும்போதோ படகுகள் நீரில் மூழ்கி விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    இதனால், துறைமுகம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது துறைமுகம் இருக்கும் அதே இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் 1881-ம் ஆண்டு துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு, கப்பல்கள் வரத் தொடங்கின.

    ஆனால், போக்குவரத்து தொடங்கிய 2 மாதத்தில் வீசிய புயலால், புதிய துறைமுகம் உருக்குலைந்து போனது.

    மனம் தளராமல் மீண்டும் வேறு வடிவில் துறைமுகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு, 1896-ம் ஆண்டு பணிகள் முடிவடைந்தன. அதன்பிறகு, சென்னை துறைமுகத்தில் இருந்து தொடர்ந்து கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது.



    இப்படி, பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே வளர்ந்த மெட்ராஸ் மாகாணம் சுதந்திரத்திற்குப் பிறகு சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்தது. 1968-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, சென்னை மாநகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு சென்னை என்று பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டது.

    இதுதான் சென்னை மாநகரின் நீண்ட நெடிய பாரம்பரிய வரலாறு.

    ஆனால், இந்த வரலாற்று நகரத்தின் இன்றைய நிலை என்ன?. வாழ்வு தந்த இடத்திற்கு நாம் கொடுத்த மரியாதை என்ன? என்பதை எண்ணிப்பார்த்தால் சோகமே மிஞ்சி நிற்கிறது.

    1930-ம் ஆண்டு வரை நீராடும் வகையில் இருந்த கூவம், அடையாறு நதிகள், கரையில் உருவான துணிகளுக்கு சாயம்பூசும் தொழிற்சாலைகளால் நாசம் அடைந்தன. இன்றைக்கு கழிவுநீர் கால்வாயாகவே மாறிவிட்டன.

    புராதன சின்னங்களின் அடையாளமாக நகரில் ஆங்காங்கே இருக்கும் பாரம்பரிய கட்டிடங்களும் போதிய பராமரிப்பு இன்றி வறுமை நிலையை வெளியே காட்டி நிற்கின்றன.

    பல வரலாற்று அடையாளங்களும் இடம்தெரியாமல் அழிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சோக வரலாற்றையும் கொண்ட சென்னை மாநகரம் தான், இன்றைக்கு 379-வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

    தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 2 கட்சிகள் தான் மாறி, மாறி ஆட்சி செய்து வந்திருக்கின்றன. ஒரு கட்சி, சிங்கார சென்னையாக மாற்றிக்காட்டுவதாக கூறியது. மற்றொரு கட்சி, எழில்மிகு சென்னையாக ஆக்குவதே லட்சியம் என்று சொன்னது.

    இதுவரை கூவம், அடையாறு நதிகளை சுத்தப்படுத்துவதற்கு எத்தனையோ கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த நிதி என்னவானது என்பது விடைதெரியாத மர்மமாக தொலைந்துபோய்விட்டது.

    இன்றைக்கு போக்குவரத்து நெரிசல், நிலத்தடி நீர்மட்டம் குறைவு, காற்று மாசுபாடு போன்ற புதிய பிரச்சினைகளையும் சென்னை மாநகரம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

    இனி வாழ தகுதியுள்ள நகரமாக சென்னை இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    எனவே, நமக்கு வாழ்வு அளிக்கும் சென்னை மாநகரை மீட்டெடுப்பதுதான் அதற்கு நாம் அளிக்கும் பிறந்தநாள் பரிசாக இருக்க முடியும். #MadrasDay #ChennaiDay

    ‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம் தான், கருணாநிதியின் நினைவுகளை போற்றி மகிழ்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #MadrasDay #ChennaiDay #MKStalin
    சென்னை:

    ‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம் தான், கருணாநிதியின் நினைவுகளை போற்றி மகிழ்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ந் தேதியான இன்று (புதன்கிழமை) சென்னை தினமாக (மெட்ராஸ் டே) கடைப்பிடிக்கிறார்கள். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டதன் நினைவாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    சென்னை என்பது பிரிட்டிஷார் இங்கு வருவதற்கு முன்பே சிறந்து விளங்கிய நெய்தல் நிலம். மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கு வாழ்வுரிமை அளித்த மண். இத்தகைய பெருமை மிகுந்த சென்னையை தலைநகராக்கினார்கள் ஆங்கிலேயர்கள்.

    சென்னை மாகாணம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தார், தி.மு.க.வின் முதல் முதல்-அமைச்சரான அண்ணா, தலைநகர் சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார். அத்துடன், மெரினா கடற்கரையில் தமிழ்ச் சான்றோர்களுக்கு சிலை அமைத்து தமிழ்-தமிழர்களின் பெருமையை சென்னை வாயிலாக உலகம் முழுவதும் அறியச் செய்தார்.

    அவரை தொடர்ந்து, முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்று, தமிழ்நாட்டில் 5 முறை முதல்-அமைச்சராக அதிக காலமான 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவரான கருணாநிதி, சென்னை என தமிழிலும், மெட்ராஸ் என ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, ‘சென்னை’ என அனைத்து மொழிகளும் ஏற்றுப் பயன்படுத்திடும் வகையில், பெயர் மாற்றம் செய்து வரலாறு படைத்தார்.

    திராவிட இயக்க வரலாற்றில் சென்னை மாநகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. திராவிடர் சங்கம், நீதிக்கட்சி ஆகியவை தொடங்கப்பட்ட மாநகரம் இது. முதல் இந்தி எதிர்ப்பு போரில் (1938) சென்னையில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறைப்பட்டு உயிரிழந்தது சென்னையில் தான். அண்ணா முதன் முதலில் சிறை கண்டதும் சென்னையில் தான். திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க.வை அவர் தொடங்கியதும் இதே சென்னையில் தான்.

    அவர் வழியில் வந்த கருணாநிதி, அண்ணா நகர், அண்ணா சதுக்கம், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா மேம்பாலம், டைடல் பூங்கா, செம்மொழிப் பூங்கா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என காலத்திற்கேற்ற நவீனமான வளர்ச்சியுடன் கூடிய வரலாற்று சிறப்புமிக்க அடையாளங்களை உருவாக்கினார்.

    கருணாநிதியால் சென்னை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்ற நான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்ற பெயரினைப் பெறும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்த நல்வாய்ப்பில்தான் சென்னையின் புதுயுக அடையாளங்களாக விளங்கும் மேம்பாலங்கள், கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

    மாநகராட்சி பள்ளிகளில் கணினி வசதிகள் கொண்டுவரப்பட்டன. சென்னையின் முகமும், முகவரியும் புதுமையான வலிவும், பொலிவும் பெற்றன. வரலாற்றின் அந்த பொன்னேடுகளை நினைவுகூர்ந்து, சென்னை தினத்தை கடைப்பிடிப்போம். ‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான். அதன் பின்னணியில் மிளிரும் கருணாநிதியின் நினைவுகளை என்றும் போற்றி மகிழ்வோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  #MadrasDay #ChennaiDay #MKStalin
    ×