search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Sabha seat"

    நாட்டில் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 50 முதல் 73 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின.
    புதுடெல்லி:

    இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ராம்ஸ்வரூப் சர்மா, மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மக்களவை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் நந்த் குமார் சிங் சவுகான் மற்றும் தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதியின் மக்களவை உறுப்பினர் மோகன் தேல்கர் ஆகியோர் மரணமடைந்தனர்.
     
    இதையடுத்து, காலியாக உள்ள இந்த 3 மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதேபோல், பல்வேறு காரணங்களால் காலியாக இருக்கும் பீகார், அசாம், மேற்கு வங்காளம், மிசோரம், மேகாலயா, ராஜஸ்தான், அரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இதில் இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் மற்றும் இந்திய தேசிய லோக்தள தலைவர் அபய் சவுதலா உள்பட பல முக்கியமான வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். 

    இந்நிலையில், 3 மக்களவை மற்றும் 29 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது.

    இந்த தேர்தலுக்கும் பொதுத்தேர்தல் போல பல மாநிலங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் தேர்தல் முடிவுக்காக அந்தந்த மாநில மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அமித் ஷா, இன்று பேரணியாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #AmitShah #LokSabhaElections2019
    காந்திநகர்:

    பாராளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியானது, பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த முறை போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், கட்சியின் தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித் ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமித் ஷா முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்த அமித் ஷா, இன்று காலை அகமதாபாத் வந்தார். அங்கு சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கூட்டணியின் செல்வாக்கை காட்டும் வகையில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமித் ஷாவுடன் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் சிங் பாதல், ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.



    இந்த பொதுக்கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட அமித் ஷா, காந்திநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.  #AmitShah #LokSabhaElections2019
    ×