search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leopard skin"

    • தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன் (வயது 42) . இந்து அறநிலையத்துறை அலுவலக தற்காலிக உதவியாளர்.
    • ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிறுத்தையின் தோலுடன் நின்று கொண்டிருந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன் (வயது 42) . இந்து அறநிலையத்துறை அலுவலக தற்காலிக உதவியாளர்.

    இவர் நேற்று ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிறுத்தையின் தோலுடன் நின்று கொண்டிருந்தார். அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    விசாரணையில் சிறுத்தை தோலை நண்பர் ஒருவரிடம் இருந்து வாங்கி இருந்ததாக அவர் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோல் நோய்வாய்ப்பட்டு இறந்த சிறுத்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்டதா? அல்லது வேட்டையாடி எடுக்கப்பட்டு உள்ளதா?, எந்த பகுதியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டு உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தையின் தோலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயமோ? அல்லது வெட்டுக்காயங்களோ இல்லை.

    எனவே அது உடல்நலக்குறைவால் இறந்த சிறுத்தையின் தோலாக இருக்கலாம் எனவும், இறந்த சிறுத்தை முண்டந்துறை வனப்பகுதியில் வசித்த சிறுத்தையாக இருக்கலாம் எனவும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரளாவுக்கு சிறுத்தை தோல் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட ருத்ராபாளையம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு சிறுத்தை தோல் கடத்தபடுவதாக அமராவதி வனத்துறையினருக்கு வந்த ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து உத்திரவின் பேரில் அமராவதி வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனவர் கோபிநாத் உள்ளிட்ட வனத்துறையினர் ருத்ராபாளையம் குளத்து பகுதியில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 37), மற்றும் பாலுச்சாமி (70)என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கையில் வைத்து இருந்த பையில் சிறுத்தை தோல் இருந்தது. விசாரணையில் கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து இருந்த சிறுத்தை தோலை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோல் பல ஆண்டுகளாக பதப்படுத்தப்பட்ட 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தை தோல் இருக்கும் , மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா செய்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றோம் என்று கூறினர்.

    ×