search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LAWS"

    • மத்திய அரசின் 3 புதிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பு.
    • 3 புதிய சட்டங்களை அமலாக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    கும்பகோணம்:

    மத்திய அரசின் 3 புதிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நேற்று கும்பகோணம் ஒருங்கி ணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு கும்பகோணம் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்களையும், பொது மக்களையும் பாதிக்கும் இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து 3 புதிய சட்டங்களை அமலாக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக 3 புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் அடையாளமாக வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.

    • தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் உள்ளிட்ட பலர் சட்டம் சார்ந்த, சேவை மையம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம், சமூக நலத்துறை திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மைய நிர்வாகி ஜெயராணி, ஒருங்கிணைந்த சேவை மையம் சகி, வழக்கு பணியாளர் பானுப்பிரியா, சமூக நல விரிவாக்க அலுவலர் வேலுத்துரைச்சி, ஊர் நல அலுவலர் முத்தாத்தாள் ஆகியோர் சட்டம் சார்ந்த, சேவை மையம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், ஊராட்சி கவுன்சிலர்கள் மாடக்கண்ணு, ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்து லட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனக ஜோதி, முத்துமாரி மற்றும் அலு வலர்கள், பணி யாளர்கள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் உதவி எண்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை எப்படி செய்வது என்பது குறித்து பேசினார். மேலும் மாநில ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி முதியோர் உதவி எண் 14567 பற்றியும், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு சட்டம் 2007 பற்றியும் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு நல அலுவலர் ரவி பாலா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்."

    ×