search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    சிவகிரி அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் உள்ளிட்ட பலர் சட்டம் சார்ந்த, சேவை மையம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம், சமூக நலத்துறை திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மைய நிர்வாகி ஜெயராணி, ஒருங்கிணைந்த சேவை மையம் சகி, வழக்கு பணியாளர் பானுப்பிரியா, சமூக நல விரிவாக்க அலுவலர் வேலுத்துரைச்சி, ஊர் நல அலுவலர் முத்தாத்தாள் ஆகியோர் சட்டம் சார்ந்த, சேவை மையம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், ஊராட்சி கவுன்சிலர்கள் மாடக்கண்ணு, ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்து லட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனக ஜோதி, முத்துமாரி மற்றும் அலு வலர்கள், பணி யாளர்கள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×