என் மலர்
நீங்கள் தேடியது "Kumuli Hill Road"
- மலைச்சாலையில் தாழ்வான தடுப்புச்சுவர் பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- குடிநீர் குழாய்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.
கூடலூர்:
முல்லை பெரியாறு அணை அருகே தேக்கடி ஏரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருந்து தரைப்பகுதியான லோயர் கேம்ப் வரை 6கி.மீ தூரம் மலைச்சாலையாகும். எனவே தேக்கடியில் சுரங்க வாய்க்கால் அமைத்து அங்கிருந்து 4 ராட்சத குழாய்கள் மூலம் மலைச்சரிவு வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குழாய்களில் அதிக பட்சமாக 1800 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லலாம். இக்குழாய்கள் குமுளி மலைச்சலையின் 3 இடங்களில் சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் இந்த குழாய்களை பார்ப்பதுடன் அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.
இப்பகுதி பாலத்தின் தடுப்பு சுவர் தாழ்வாக இருப்பதால் தவறி விழுந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் இப்பகுதியில் நிலை தடுமாறி பள்ளத்தில் விழும் நிலையும் இருந்தது. இதனை தடுக்க தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தாழ்வான தடுப்புச்சுவர் பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆரம்ப த்தில் உயரமாக இருந்த தடுப்புசுவர் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சாலை பணியால் தாழ்வாக மாறிவிட்டது. குழாய்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதால் விபத்து ஏற்படும் சூழல் இருந்தது. இதனையடுத்து இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1 வாரத்தில் இப்பணிகள் நிறைவடையும் என்றனர்.
- அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
- வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்றனர்.
கூடலூர்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக விடியவிடிய மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் குமுளி-லோயர் கேம்ப் மலைச்சாலையில் அடுத்தடுத்து 2 மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மரம் விழுந்ததால் கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்ல அறிவுறுத்தினர். லோயர் கேம்புக்கு வந்த பல்வேறு வாகனங்களை மாற்றுப்பாதை வழியாக செல்ல அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர்.
அதனை தொடர்ந்து வனத்துறையினருடன் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் கூடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் வாகனங்கள் சென்றன. அதிர்ஷ்ட வசமாக மரம் விழுந்த போது வாகனங்கள் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
போடி, குரங்கணி, கொட்டக்குடி, டாப்ஸ்டேசன், போடிமெட்டு மலைப்பகுதிகளிலும் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 10-வது கொண்டை ஊசி வளைவு அருகே பாறைகள் உருண்டு சாலைக்கு வந்தது. இதனை பார்த்ததும் வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனங்களை நிறுத்தினர்.
அதனை தொடர்ந்து ஊழியர்களின் உதவியோடு பாறைகளை அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்தனர். இருந்தபோதும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனும், சிரமத்துடனும் சென்றனர்.






