search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "koyambedu bus stop"

    பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள். #Pongal2019 #OmniBuses
    போரூர்:

    பொங்கல் பண்டிகை நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைத்தது.

    இதனால் சென்னை மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து தென் மாவட்டத்துக்கு செல்ல 12 ஆயிரம் சிறப்பு பஸ்கள் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், தாம்பரம் ரெயில் நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 11-ந்தேதி இரவு முதலே பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    இதன் காரணமாக பஸ் நிலையங்களில் தினந்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் ரெயில் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்திலும் கடும் கூட்டம் காணப்படுகிறது.

    பயணிகளின் கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் சாதாரண ஆம்னி பஸ்சில் ரூ. 1,100 முதல் ரூ. 1,500 வரை வசூலிக்கப்பட்டது. வழக்கமாக ரூ. 600 முதல் ரூ. 700 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் படுக்கை வசதி உள்ள பஸ்களில் ரூ. 1,800 முதல் ரூ. 2,200 வரை வசூலித்தனர்.

    சென்னையில்இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் பஸ்களில் ரூ. 2200 முதல் ரூ. 2500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டண உயர்வு கடந்த 9-ந்தேதி முதலே வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை- பெங்களூர், சென்னை-கோவை, சென்னை-திருச்சி, சென்னை - தஞ்சாவூர், சென்னை-மயிலாடுதுறை, சென்னை-கரூர் இடையே இயக்கப்பட்ட பஸ்களிலும் ரூ. 1,500 முதல் ரூ. 1,800 வரை கட்டணமாக பெற்றனர்.


    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் அதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதுதவிர விதிமுறையை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ. 30 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களில் இதுவரை 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை 10 ஆயிரத்து 427 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.

    நாளை பொங்கல் பண்டிகை என்பதால் இன்று இரவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆம்னி பஸ் கட்டணம் குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘சில சிறிய தனியார் பஸ் உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்துள்ளனர். பெரிய பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கவில்லை. வழக்கமான கட்டணத்தையே வசூலித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pongal2019 #OmniBuses
    பொங்கல் பண்டிகைக்காக வெளியூர்களுக்கு செல்லக்கூடிய சிறப்பு பஸ்கள் இன்று மாலை முதல் இயக்கப்படுகின்றன. சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்படுகின்றன. #Pongal #TNBuses #SpecialBuses
    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடும் வகையில் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக விரிவான ஏற்பாடுகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்ல வசதியாக 14-ந்தேதி விடுமுறையும் விடப்பட்டுள்ளது. நாளை (சனிக்கிழமை) முதல் 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் இன்று பிற்பகலுக்கு பின்னர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,275 பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளது.

    4 நாட்களுக்கு சேர்த்து சென்னையில் இருந்து 14,263 பஸ்கள் இயக்கப்படுகிறது.


    வெளியூர் செல்லக்கூடிய பஸ்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல வசதியாக 5 இடங்களில் இருந்து பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. கோயம்பேடு, தாம்பரம் அண்ணா பஸ்நிலையம், ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் கே.கே.நகர் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    பஸ் நிலையங்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் 5 பஸ் நிலையங்களுக்கும் 250 மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக வருகிற 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு மொத்தமாக 3,776 பஸ்களும், முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7,841 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்லவும், சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கும் இதுவரை 1.25 லட்சம் பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லவும் சொந்த ஊர்களில் இருந்து திரும்பவும் அரசு பஸ்களில் பயணிப்பதற்காக தமிழகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரத்து 808 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதன்மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.6 கோடியே 8 லட்சத்து 82 ஆயிரம் வசூல் கிடைத்துள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் அரசு பஸ்களில் 14,551 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.69.02 லட்சம் வசூல் ஆகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Pongal #TNBuses #SpecialBuses
    ஆந்திரா மார்க்கத்திற்கு 477 பஸ்கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆந்திரா மார்க்கமாக பயணம் செய்யக் கூடியவர்கள் இனி கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை. #MadhavaramBusStop
    சென்னை:

    சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் அதிகளவு பஸ்களை இயக்கக் கூடிய மையமாக திகழ்கிறது.

    தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் வந்து செல்கின்றன. 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த பஸ் நிலையத்திற்கு மாநகர பஸ்களும் தினமும் ஆயிரத்திற்கும் மேல் சென்று வருகின்றன.

    தினசரி 2278 அரசு பஸ்கள் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பண்டிகை காலங்களில் பஸ்களை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.

    பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்வதிலும், உள்ளே வருவதிலும் அங்கு நிறுத்தி வைப்பதிலும் நெரிசல் ஏற்பட்டு வருவதால் பல மணி நேரம் கோயம்பேடு பகுதியிலேயே முடங்கி விடுகின்றன. இதனால் கடந்த 2 வருடமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் 6 இடங்களில் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டு நெரிசல் குறைக்கப்பட்டன.

    இதற்கிடையில் மாதவரத்தில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அடுக்கு மாடி பஸ்நிலையம் புதிதாக கட்டப்பட்டது. இந்த பஸ்நிலையத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். புதிய பஸ் நிலையத்தில் ஆந்திரா மார்க்கத்திற்கு செல்லக் கூடிய பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது.

    காளகஸ்தி, திருப்பதி, நாயுடுபேட்டை, நெல்லூர், நகரி, புத்தூர், சத்தியவேடு, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அங்கிருந்து பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

    இதுவரையில் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முதல் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 238 பஸ்களும், அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.) 6 பஸ்களும், ஆந்திர மாநில அரசு பஸ்கள் 205-ம், தனியார் பஸ்கள் 28-ம் என மொத்தம் 477 பஸ்கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆந்திரா மார்க்கமாக பயணம் செய்யக் கூடியவர்கள் இனி கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை. மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையத்திற்கு தான் போக வேண்டும்.

    இதுவரையில் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆந்திர மார்க்க 477 பஸ்கள் அங்கிருந்து மாதவரத்திற்கு மாற்றப்பட்டதால் கோயம்பேட்டில் நெரிசல் குறைந்துள்ளது. பயணிகள் கூட்டம் மூன்றில் ஒரு மடங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பஸ்களை கோயம்பேட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதில் இருந்த நெருக்கடியும் இனி குறையும் என்று கூறப்படுகிறது.

    மாதவரம் புதிய பஸ் நிலையத்திற்கு சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து இணைப்பு பஸ் விட திட்டமிடப்படுகிறது. கோயம்பேடு, பாரிமுனை, எழும்பூர், தாம்பரம், அடையாறு, திருவான்மியூர், வண்டலூர், அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் இருந்து மாதவரம் புதிய பஸ்நிலையத்திற்கு மாநகர பஸ்கள் அதிகளவு இயக்கினால்தான் பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதி மாநகர போக்குவரத்து கழகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 37 மாநகர பஸ்கள் தற்போது பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதுதவிர 216 மாநகர பஸ்கள் அங்கு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. #MadhavaramBusStop
    ×