search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi Biopic"

    பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை படமாகி வரும் நிலையில், கருணாநிதியின் வாழ்க்கையும் படமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதில் நடிக்க பிரகாஷ்ராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #KarunanidhiBiopic
    தென் இந்திய சினிமாவில் இது தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, தெலுங்கில் முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது.

    எம்.ஜி.ஆர் என்ற பெயரில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. இதை காமராஜ், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை இயக்கிய பாலகிருஷ்ணன் படமாக்கி வருகிறார்.

    எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியாக பிக்பாஸ் ரித்விகா நடிக்கிறார். இப்படத்தில் கருணாநிதி கதாபாத்திரத்திற்கும், ஜெயலலிதாவாக யார் நடிக்கப்போகிறார் என்பதும் இன்னும் முடிவாகவில்லை. எம்.ஆர்.ராதாவாக பாலா சிங் நடிக்கிறார்.



    இயக்குனர் பிஆர்.பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார். எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு நடிக்கிறார். சென்னை, பாலக்காடு மற்றும் திருப்போரூரில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்க இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய், பிரியதர்ஷினி மூன்று இயக்குனர்களும் போட்டி போடுகின்றனர்.

    விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க வைக்க இந்தி நடிகை வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்தின் பெயர் த அயர்ன் லேடி. நித்யாமேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். வரும் பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதா பிறந்தநாளில் படத்தை தொடங்க இருக்கிறார்கள்.



    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் பிரபல தயாரிப்பாளர்கள் சிலர் இறங்கி இருக்கின்றனர். ஏற்கெனவே நடிகர் பிரகாஷ்ராஜ் ‘கருணாநிதி வேடத்தில் நடிக்க ஆசை’ என்று தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

    எம்.ஜி.ஆர், கருணாநிதியை மையமாக வைத்து ‘இருவர்’ படத்தை இயக்கினார் மணிரத்னம். அப்போது நடந்த தமிழக அரசு திரைப்பட விழாவில் கலந்துகொண்ட முதல்வர் கருணாநிதி ‘இருவர்’ படத்தில் கருணாநிதி வேடத்தில் நடித்ததற்காக பிரகாஷ்ராஜுக்கு விருது வழங்கினார்.

    1967-ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியான கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று படத்தை விரைவில் தொடங்கும் வேலையை ரகசியமாக செய்து வருகின்றனர்.

    கருணாநிதி வேடத்தில் நடிப்பதற்காக பிரகாஷ்ராஜிடம் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. #KarunanidhiBiopic #PrakashRaj

    மதத்தின் பெயரால் அரசியல் செய்யாதவர் கருணாநிதி, அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். #KarunanidhiBiopic #Prakashraj
    மணிரத்தினம் இயக்கிய இருவர் படத்தில் திமுக தலைவர் கருணாநிதியாக நடித்தவர் பிரகாஷ்ராஜ். கருணாநிதியின் முழு வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அதில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறி இருப்பதாவது:-

    ‘இருவர் படத்தில் நடித்த போது நான் கருணாநிதியை சந்திக்கவில்லை. அந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டபோது எனக்கு 30 வயது தான். அந்த சமயத்தில் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். இருவரில் நடித்தபோது, மணிரத்னத்தின் வழியாக நான் கருணாநிதியை பார்த்தேன். கருணாநிதியின் பேச்சுகள் அடங்கிய டேப்புகளை என்னிடம் அளித்தார்.

    எனக்கு காப்பியடிக்க வராது மணி என்று நான் கூறியது நினைவிருக்கிறது. அவர் போன்று அப்படியே நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நான் அவர் உயரம் இல்லை, நிறம் இல்லை, அவர் போன்று எனக்கு பேசவும் வராது. கதைப்படி நான் சிறப்பாக செய்வேன் என்று தெரிவித்தேன்.



    நான் கருணாநிதி பற்றி நிறைய ஆய்வு செய்தேன். அவரை பற்றி படிக்கப் படிக்க எனக்கு அவரின் வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது. அவர் மீதான மரியாதையும் அன்பும் மேலும் அதிகரித்தது. அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த நட்பு குறித்து அறிந்து அசந்து போய்விட்டேன்.

    பல ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக நான் கருணாநிதியை நேரில் சந்தித்தேன். நான் படத்தில் நடித்த கதாபாத்திரம் போன்று இல்லாமல் வித்தியாசமாக இருந்தார். இருவர் பிடித்திருந்ததா? கொஞ்சமாவது உங்களை போன்று நடித்தேனா? என்று நான் கருணாநிதியிடம் கேட்டேன். ஆமாம் கிட்டத்தட்ட என்று அவர் கூறினார். அதன் பிறகு நாங்கள் படம் பற்றி மீண்டும் பேசவே இல்லை.

    கல்கி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது வாங்கிய நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் டென்‌ஷனில் இருந்தார்கள். தன் கதாபாத்திரத்தில் நடித்த நபரை பார்த்துவிட்டு கருணாநிதி என்ன செய்வார் என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலாக இருந்தனர்.



    பிரகாஷ்ராஜூக்கு இந்த விருதை கொடுப்பதில் ஆனந்தம். இது அவருக்கு தெரியும், எனக்கு தெரியும். எங்கள் இருவருக்கும் தெரியும் என்றார். இருவர் படத்திற்கு முதலில் ஆனந்தம் என்றே பெயர் வைக்கப்பட்டிருந்தது.

    அதன் பிறகு நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டோம். மணிக்கணக்கில் அரசியல் பற்றி பேசுவோம். ஒன்றாக காபி குடிப்போம், வாக்கிங் போவோம். அதற்காக எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று கூறமாட்டேன். அவரை நாம் முழுதாக புரிந்து கொள்ளவில்லை. மதத்தின் பெயரால் அரசியல் செய்யாத அவரை நான் எப்பொழுதுமே மதிக்கிறேன். அவர் தமிழகத்தில் ஜனநாயக விதையை விதைத்தார். அவர் துவங்கியதை யாராலும் மதத்தை வைத்து மாற்ற முடியாது. இன்னொரு கருணாநிதியை பார்ப்போமா என்பது சந்தேகமே. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அவர் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்’.

    இவ்வாறு அவர் கூறினார். #KarunanidhiBiopic #Prakashraj 

    ×