search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanthu vatti"

    • மாவட்டத்தில் முதல்முறையாக கந்துவட்டி செலுத்த முடியாதவரிடம் இருந்து செல்போனை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • வேலூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கந்துவட்டி கும்பல் குறித்து போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

    இந்த நிலையில் மாவட்டத்தில் முதல்முறையாக கந்துவட்டி செலுத்த முடியாதவரிடம் இருந்து செல்போனை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 34).ஆட்டோ டிரைவர் இவர் கழிஞ்சூரை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ 8,000 கடன் வாங்கியிருந்தார்.

    இந்த பணத்திற்கு வாரந்தோறும் ரூ.400 செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் சுப்பிரமணியால் கடந்த 2 வாரமாக பணம் செலுத்த முடியவில்லை. இதனை தொடர்ந்து கார்த்தியின் உறவினர் விக்னேஷ் என்பவர் நேற்று சுப்பிரமணியிடம் பணம் கேட்டுள்ளார்.

    அப்போது பணம் இல்லாததால் சுப்பிரமணி வைத்திருந்த செல்போனை விக்னேஷ் பிடுங்கி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி இதுகுறித்து கந்துவட்டி கொடுமை செய்வதாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×