என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kalliamman Temple"
- கோவில்பட்டி அருகே காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
- விழாவை முன்னிட்டு காலையில் கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி கிராமத்தில் செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தளத்துடன் வேதமந்திரங்கள் முழங்க, புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் மூலவர் விமான கோபுரங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
- தொடர்ந்து அம்மாளுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் 108 குடங்களில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவிலில் பல்வேறு யாகங்கள், ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மாளுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நெல்லை சுந்தரேசர் சர்மா தலைமையில் விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், அங்கு ராபாசனம், சேம கும்ப பூஜை உட்பட 21 பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள்,அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வடக்கு சன்னதுபுதுக்குடி கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியார் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்