என் மலர்
நீங்கள் தேடியது "Juvenile Care Home"
- விசாரணை நடத்தி தப்பி ஓடிய சிறுவர்களை போலீசார் தேடி வந்தனர்.
- தப்பியோடிய 5 சிறுவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு வார்டனை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் தப்பி ஓடினர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய சிறுவர்களை தேடி வந்தனர். அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தாழையூத்து பகுதியில் ஒரு சிறுவன், ஸ்ரீவைகுண்டத்தில் 2 சிறுவர்கள், தூத்துக்குடியில் 3 சிறுவர்கள் என 6 பேர் பிடிபட்டனர். தொடர்ந்து மற்றவர்களை தேடும் பணி நடந்தது. இதில் தென்காசியை சேர்ந்த ஒரு சிறுவன் போலீசாரிடம் பிடிபட்டான். தப்பியோடிய மேலும் 5 சிறுவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை பிடிப்பதற்காக போலீசார் குமரி மாவட்டம் சென்றுள்ளனர்.
- கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
- இல்லத்தின் பணியாளர் ராஜேஷ் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருச்சி:
திருச்சி கீழபுலிவார்டு ரோடு, வி.என்.நகரில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்கள், சிறுமிகள் தங்க வைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த, ஒடிசா மாநிலம் ரய்டா காந்தி நகரை சேர்ந்த மனோஜ்(வயது 16), ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி காந்தி நகரை சேர்ந்த சிவக்குமார்(16), காஞ்சிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மோனீஸ் கார்த்திக்(16), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பாண்டி(16) ஆகியோர் இரவு நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
காப்பக வார்டன் இரவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அவரது கையில் இருந்த சாவியை பிடுங்கி கொண்டு கேட் பூட்டை திறந்து ஓடியுள்ளனர். கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இல்லத்தின் பணியாளர் ராஜேஷ் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய சிறுவர்களை தேடி வருகின்றனர்.






