என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் வார்டனை தாக்கி விட்டு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய மேலும் ஒரு சிறுவன் சிக்கினான்
    X

    நெல்லையில் வார்டனை தாக்கி விட்டு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய மேலும் ஒரு சிறுவன் சிக்கினான்

    • விசாரணை நடத்தி தப்பி ஓடிய சிறுவர்களை போலீசார் தேடி வந்தனர்.
    • தப்பியோடிய 5 சிறுவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு வார்டனை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் தப்பி ஓடினர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய சிறுவர்களை தேடி வந்தனர். அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று தாழையூத்து பகுதியில் ஒரு சிறுவன், ஸ்ரீவைகுண்டத்தில் 2 சிறுவர்கள், தூத்துக்குடியில் 3 சிறுவர்கள் என 6 பேர் பிடிபட்டனர். தொடர்ந்து மற்றவர்களை தேடும் பணி நடந்தது. இதில் தென்காசியை சேர்ந்த ஒரு சிறுவன் போலீசாரிடம் பிடிபட்டான். தப்பியோடிய மேலும் 5 சிறுவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை பிடிப்பதற்காக போலீசார் குமரி மாவட்டம் சென்றுள்ளனர்.

    Next Story
    ×