என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "JEWELRY STOLEN"
- வியாபாரியிடம் நகை பறிக்கப்பட்டது
- 2 பேர் பைக்கில் வந்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து (வயது60). இவர் 10ஆண்டுகளுக்கு மேலாக பஸ் ஸ்டாண்ட் சாலையில் கூழ் வியாபாரம் செய்து வருகின்றார். நேற்று மதியம் 3 மணி அளவில் அடையாளம் தெரியாத பைக்கில் வந்த 2 பேர், பைக்கை நிறுத்தி கூழ் குடிப்பது போல் பேசிக்கொண்டு அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 10 மாதங்களாக அருள்குமார் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார்.
- கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்கின்றனர்.
கோவை
கோவை இருகூர் அருகே உள்ள சிவசக்தி நகரை சேர்ந்தவர் அருள் குமார் (வயது 32 ). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 மாதங்களாக அருள்குமார் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெள்ளலூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், செயின், தங்க நாணயம், கைச்செயின், நெக்லஸ், வளையல் உள்பட 17 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
வீட்டிற்கு திரும்பிய அருள்குமார் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கொள்ளையர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் புகார் என்பதில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபர் தப்பி ஓடினார்.
- வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார்
கரூர்:
கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தை அடுத்த கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி காமாட்சி (வயது 70) இவர் நேற்று காலை வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நடந்து சென்ற இளைஞர் காமாட்சி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செயது விசாரிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்