search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel confiscation"

    • விடுதி பெண் காப்பாளரிடம் நகை பறிப்பு முயற்சி-2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் எம்.ரெட்டியப்பட்டி அருகே யுள்ள சிலுக்கப்பட்டி பகுதி யில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த அரசு பெண்கள் மேல்நி–லைப்பள்ளி விடுதி காப்பா ளர் சுப்புலட்சுமி (வயது 58) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கள் நகை பறிப்பு முயற்சி யில் ஈடுபட்டனர்.

    சுதாரித்துக்கொண்ட அவர் நகையுடன் தப்பினார். இதுகுறித்து எம். ரெட்டியப் பட்டி போலீசில் சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள ஒரு சி.சி.டி.வி. காட்சிப்பதிவு களை கொண்டு நகை பறிப்பு சம்பவத்தில் ஈடு பட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு வாலிபர் களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட தில் அவர்கள்தான் பெண் விடுதி காப்பாளர் சுப்பு லட்சுமியுடம் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ரெட்டையூரணி பகுதியை சேர்ந்த யுவஸ்ரீதர் (23), பரமக்குடி மணிநகர் பகுதி யைச் சேர்ந்த ஆதீஸ்வ ரன் (18) என்பதும் தெரிந்தது. அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மதுரையில் ஆட்டோவில் ஏறிய பயணியை தாக்கி 4 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது47). இவர் வேலை நிமித்தமாக மதுரை வந்திருந்தார்.

    சம்பவத்தன்று வெளியே செல்வதற்காக ஆட்டோவில் பயணம் செய்தார். அவனியாபுரம் பகுதியில் சென்றபோது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென ஆட்டோவை நிறுத்திய டிரைவர் கத்தியை காட்டி மிரட்டி நவநீத கிருஷ்ணனை தாக்கி 4 பவுன் செயின், பாஸ்போர்ட் வைத்திருந்த பையையும் பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

    செல்போன் பறிப்பு

    நரிமேடு பஜனைமடம் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன்(21). இவர் திருப்பாலை பகுதியில் நடந்து சென்றபோது 3 பேர் தாக்கி செல்போனை பறித்துச் சென்றனர். திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், செல்போனை பறித்தது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், கார்த்திக்ராஜா, வசந்த் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    ×