search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jawans"

    தீபாவளியை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சில் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று இனிப்பு வழங்கி கொண்டாடினார். #Diwali #Modi #HarsilinUttarakhand
    கேதார்நாத்:

    நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலுள்ள ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்

    2014ம் ஆண்டு சியாச்சினில் உள்ள ராணுவ முகாமுக்கு வருகை தந்த மோடி, உலகின் மிக உயரமான போர்ப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். 2015ம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள காஸாவில் டோக்ராய் போர் நினைவிடத்தில் வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

    2016 ம் ஆண்டு இமாச்சலில், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். 2017 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள பிஎஸ்எஃப் படை வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார். இந்த ஆண்டு தீபாவளியை எல்லையில் உள்ள வீரர்களுடன் கொண்டாடப் போவதாக தெரிவித்தார்.



    அதன்படி இன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சில் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மோடி, அவர்களின் பணியை வெகுவாகப் பாராட்டினார். முன்னதாக கேதார்நாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் கேதார்நாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், வட இந்தியாவில் இன்று தீபாவளி பண்டிகை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #Diwali #Modi #HarsilinUttarakhand
    சத்தீஸ்கர் மாநிலத்தின் தாண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் இன்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். #Chhattisgarhattack
    ராய்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச்செய்தனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 வீரர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Chhattisgarhattack #IEDblast #jawanskilled
    ×