search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ippasi Thirukalyanam"

    • விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது
    • பக்தர்களுக்கு மஞ்சள், கயிறு, வளையல், இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா நடைபெற்றது.

    இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கபட்டு விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் சுவாமி அம்பாள் உற்சவர் ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜை, திருமண வைபவ ஹோமம் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து 11 வகை சீர்வரிசை தட்டுகள் கோவில் வளாகத்தை சுற்றி வந்து சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல் திருமாங்கல்யம் கட்டுதல், திருமண சடங்கு நடந்தது.

    பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், கயிறு, வளையல், இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவி நாராயணன், உமா சங்கரி முத்துமுருகன், கீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தனர்.

    • ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சுவாமி, அம்பாளுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    15 நாட்கள் திருவிழா

    15 நாட்கள் நடைபெறக்கூடிய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்பாள் சிவபூஜை செய்யும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

    இதையொட்டி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு காசுமாலை, பவளமாலை, காலில் கொலுசு, தலையில் சடை என சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    தொடா்ந்து சிவபூஜைக்கு தேவையான தேங்காய், பழம், பூ, வஸ்திரம், தாம்பூலம் மற்றும் பழங்கள் உள்ளிட்ட 11 தாம்பூல தட்டுகளுடன் பஞ்ச வாத்தியங்கள் மற்றும் நாதஸ்வரம், மேளம் இசைக்க அம்பாள் சன்னதியில் இருந்து காந்திமதி அம்பாள் கையில் தாமரைப்பூவும், மலா் கூடையையும் ஏந்திய சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதி மகாமண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவபூஜை

    தொடா்ந்து அா்ச்சகா், அம்பாள்- சிவனை பூஜை செய்வது போன்ற பாணியில் துபம் இடுதல், பூக்களால் அா்ச்சனை செய்தல் என காந்திமதி அம்பாள், சுவாமி நெல்லையப்பருக்கு சிவபூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் சோடஷ தீபாராதனை சுவாமிக்கும்- அம்பாளுக்கும் காண்பிக்கப்பட்டு வேதம் வாத்யம், பஞ்ச புராணம் பாடப்பட்டது. நிறைவாக சுவாமிக்கு மூலஸ்தானத்தில் 5 பஞ்ச தட்டு கற்பூர ஆரத்தியும், அம்பாளுக்கு 1 பஞ்ச தட்டு ஆரத்தியும் காண் பிக்கப்பட்டது.

    பூஜைகள் முடிந்தபின் அம்பாள் ஊா்வலமாக தன் கோவிலுக்கு எழுந்தருளினாா். இந்நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழும். நாளை (சனிக்கிழமை) மதியம் கம்பா நதி காட்சிமண்டபத்தில் அம்பாளுக்கு- சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்வும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண விழாவும் நடைபெற உள்ளது.

    அதனை தொடா்ந்து 3 நாட்கள் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழா நடைபெறும்.

    ×