search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPhone 7"

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் குவால்காம் சிப்செட்டுடன் ஜெர்மனியில் மீண்டும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple #Qualcomm



    ஆப்பிள் நிறுவனம் தனது பழைய ஐபோன் மாடல்களை ஜெர்மனியில் மீண்டும் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இம்முறை ஐபோன்கள் குவால்காம் சிப்களை கொண்டிருக்கும் என தெரிவித்திருக்கிறது. 

    முன்னதாக குவாலகாம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விற்பனைக்கு ஜெர்மனியின் 15 சில்லறை விற்பனையகங்களில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் காப்புரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
     
    இந்நிலையில், குவால்காம் நிறுவனம் மொபைல் போன்களை வயர்லெஸ் டேட்டா நெட்வொர்க்களுடன் இணைக்கும் மோடெம் உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் காப்புரிமைகளை மீறியிருப்பதாக ஆப்பிள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. 



    எனினும், ஆப்பிள் நிறுவனமும் காப்புரிமைகளை மீறியதாக குவால்காம் தெரிவித்து வருகிறது. இருநிறுவனங்கள் சார்ந்த முக்கிய வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரயிருக்கிறது.  

    2016 ஆம் ஆண்டு வரை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் குவால்காம் சிப்செட்களை வழங்கிவந்தது. பின் 2016 ஆம் ஆண்டுக்கு பின் குவால்காம் சிப்களை தவிரித்து, ஆப்பிள் நிறுவனம் இன்டெல் மோடெம் சிப்களை வழங்க துவங்கியது. கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த சாதனங்களில் அந்நிறுவனம் இன்டெல் சிப்களை மட்டுமே பயன்படுத்தியிருந்தது. 

    இந்த சூழலிலும் ஆப்பிள் தனது பழைய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களில் மட்டும் தொடர்ந்து குவால்காம் சிப்களை பயன்படுத்தி வருகிறது. இன்டெல் சிப்களை கொண்டிருக்கும் புதிய ஐபோன் மாடல்கள் ஜெர்மனியில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் விற்பனைக்கு ஜெர்மனி நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #Apple #iPhone #Qualcomm



    ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக குவால்காம் தொடர்ந்த வழக்கில் ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன் படி ஜெர்மனியில் ஐபோன் 7,  ஐபோன் 8 மாடல்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன நீதிமன்றமும் சில ஐபோன்களின் விற்பனைக்கு அந்நாட்டில் தடை விதித்து இருந்தது.

    ஐபோன் விற்பனைக்கான தடையை ரத்து செய்யக்கோரி ஆப்பிள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், ஜெர்மனி நாட்டின் சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

    ஜெர்மனியில் இயங்கி வரும் 15 விற்பனை மையங்களில் நீதிமன்ற உத்தரவின் படி ஐபோன் மாடல்கள் விற்பனை செய்யப்படாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஐபோன்களின் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது.



    ஜெர்மனியில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விற்பனை மூலம் ஆப்பிள் பெற்ற மொத்த வருவாய் மற்றும் லாபம் உள்ளிட்ட விவரங்களை ஆப்பிள் வழங்க வேண்டும் என்ற குவால்காமின் கோரிக்கையை ஏற்று அது தொடர்பான விவரங்களை சமர்பிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே சீன விற்பனைக்கான தடையை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்தது.

    இவ்வாறு பயனர்கள் தங்களது ஐபோன்களை அப்டேட் செய்யும்போது செயலிகளிடையே மாறும் விதம், அளவு மற்றும் புகைப்படங்களின் தோற்றம் உள்ளிட்டவை மாறியிருப்பதை கவனிக்க முடியும். ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஒருவரை ஒருவர் எதிர்த்து பரஸ்பரம் வழக்கு தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    கடலில் விழுந்த ஐபோன் 7 ஆழ்கடலில் 48 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டிருப்பது ஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. #iPhone7



    ஆப்பிள் ஐபோன் தரம் உலகம் அறிந்த ஒன்று தான், எனினும் இதன் தரத்தை நிரூபிக்கும் சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியிருக்கிறது. 

    கனடா நாட்டு சுற்றுலா பயணி ஒருவர், இங்கிலாந்து சென்றிருந்த போது, கடலில் கயாகிங் (படகு சவாரி) செய்த போது தான் பயன்படுத்தி வந்த ஐபோன் 7 ஸ்மார்ட்போனின் அவரது கைகளில் இருந்து நழுவி, கடலில் விழுந்து விட்டது. கடலில் விழுந்தது எப்படி எடுப்பது என தெரியாமல், அவர் கனடாவிற்கே திரும்பி சென்றுவிட்டார்.

    இந்நிலையில், இங்கிலாந்தின் டர்டிள் டோர், டார்செட் பகுதியில் ஆழ்கடலில் நீந்தி கொண்டிருந்த ஸ்கூபா டைவர் (செரிஸ்) ஆழ்கடலில் ஏதே மின்விளக்கு மிளிர்வதை கண்டார். பின் அதன் அருகில் ஆர்வத்துடன் சென்ற அவருக்கு அதிர்ச்சி கலந்த சுவாரஸ்ய உணர்வு ஏற்பட்டது. தன் அருகே மிளிர்ந்தது குறுந்தகவல் நோட்டிஃபிகேஷன் பெற்ற ஐபோன் 7 என்பதை அவரால் நம்பவே முடியவில்லை.



    கடலில் விழுந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆன நிலையிலும் ஐபோன் 7 ஸ்மார்ட்போனில் 84% சார்ஜூடன் தண்ணீரில் சீராக இயங்கியதோடு, அதில் நெட்வொர்க் சீராக இருந்ததால், குறுந்தகவல் ஒன்றும் வந்திருந்தது ஸ்கூபா டைவரான செரிஸ் வியப்பிற்கு காரணமாக அமைந்திருந்தது.

    ஆழ்கடலில் கண்டெடுத்த ஐபோன் 7 ஸ்மார்ட்போனினை அப்பகுதியில் வசித்து வந்த ஸ்மார்ட்போன் உரிமையாளரின் நண்பரிடம் கொடுத்து, அவர் மூலம் கனடாவிற்கு அனுப்ப உதவியாக செரிஸ் இருந்திருக்கிறார். கடினமான சூழலிலும் ஸ்மார்ட்போன் சீராக இயங்க அதன் உரிமையாளர் பயன்படுத்திய பாதுகாப்பு கேஸ் தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

    ஆப்பிள் ஐபோன் 7 மாடலில் IP67 தர சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதுவே ஸ்மார்ட்போனிற்கு ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள காரணமாக அமைந்திருக்கிறது. #iPhone7 #applenews

    புகைப்படம்: நன்றி BBC.com | Divemagazine.co.uk
    ×