search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "introductory meeting"

    • தூத்துக்குடி மாவட்டத்தை முதன்மை பெற்ற மாவட்டமாக்க நாம் திட்டக்குழு மூலம் வளர்ச்சி பணிகளை செயலாக்கி காட்ட வேண்டும்.
    • திட்டக்குழு உறுப்பினர்கள், எம்.பி., அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் அவர்களிடம் துணிச்சலாக தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூற வேண்டும் என்று பிரம்மசக்தி உமரிசங்கர் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 7 பேரும், நகரத்தில் இருந்து 5 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டுள்ள திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் அறிமுக கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக முத்து அரங்கத்தில் திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான பிரம்மசக்தி உமரிசங்கர் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட ஊராட்சி செயலர் ஜெயஸ்ரீ வரவேற்று திட்டக்குழுவின் செயல்பாடுகள் குறித்து விவரித்து கூறினார். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு தலைவர் பிரம்மசக்தி உமரி சங்கர் பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்கள் பிரதிநிதிகளுக்கு தான் மக்களுக்கு என்னெ ன்ன திட்டங்கள் தேவை, என்ன அடிப்படை வசதிகள் தேவை என்பது தெரியும், எனவே நாம் தான் மக்களிடம் நெருங்கி இருக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தை முதன்மை பெற்ற மாவட்ட மாக்க நாம் திட்டக்குழு மூலம் வளர்ச்சி பணிகளை செயலாக்கி காட்ட வேண்டும். நமக்கு தான் அதி காரம், உரிமை அதிகமாக உள்ளது. அதிகாரிகள் இனி மேல் சுயமாக முடிவெடுத்து அதனை செயல்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம்.

    திட்டக்குழு மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். திட்டக்குழு உறுப்பினர்கள், எம்.பி., அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் அவர்களிடம் துணிச்சலாக தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூற வேண்டும். நாம் திறமையாக செயல் பட்டால் அதிகாரி களுக்கு அறிவுரை கொடுக்க லாம் .அதனை நாம் வள ர்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அதிகாரி களுக்கு திட்டக்குழு மூலம் உத்தரவிட முடியுமா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார் கேட்டுக் கொண்டார். 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடக்கும். அரசிடம் இருந்து தகவல் வந்தவுடன் இது குறித்து தெரிவி க்கப்படும் என்று மாவட்ட ஊராட்சி செயலர் ஜெயஸ்ரீ தெரிவித்தார். கூட்டத்தில் அனைத்து திட்டக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் அ.ம.மு.க. செயலாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
    • தெற்கு நகர செயலாளராக கார்த்திக், வடக்கு நகர செயலாளராக அஸ்வின்குமார் நியமிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் காரைக்குடி வடக்கு, காரைக்குடி தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிய நகர செயலாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மாவட்ட அ.ம.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினார்.மாநில பொறியாளர் அணி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் வரவேற்றார்.

    காரைக்குடி தெற்கு நகர செயலாளராக கார்த்திக், வடக்கு நகர செயலாளராக அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர். அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி வழங்கி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் பழனி பெரியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் பந்தாபாண்டி, முத்துபாரதி, மாவட்ட பொருளாளர் லாரன்ஸ், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுமதி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்துகொண்டனர்.நகர தலைவர் மைக்கேல் நன்றி கூறினார்.

    • பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
    • மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன், மாவ ட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் மாவட்ட துணைத் தலைவர் சிவசாமி,தெற்கு ஒன்றிய தலைவர் சேசு மாரிமுத்து ஆகியோா் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். புதிதாக பொறுப்பேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் நியமன கடிதம் வழங்கப்பட்டு சால்வை அணிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கலிராயன் விடுதி ஊராட்சியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இறுதியாக ஒன்றிய பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

    ×