search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Information board"

    • தினமும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
    • சில முக்கிய இடங்களுக்கான கட்டணங்கள், ரெயில் சேவையின் நேரம், வழித்தடங்கள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தற்போது அவசியமாகிவிட்டது. தினமும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களும் அதனை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

    ரெயில்கள், பஸ்கள் மூலம் சென்னைக்கு வருவதற்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கான வழிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் விரைவில் தகவல் பலகைகளை வைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- பஸ், ரெயில் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து செல்கிறார்கள். அவர்களில் பலருக்கு மெட்ரோ ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள இடம் தெரியாது. எனவே இந்த இடங்களில் தகவல் பலகை பொறுத்தப்படும்.

    இந்த பலகையானது பயணிகளுக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழிகளை மட்டும் காட்டாமல் நகரத்தில் உள்ள சில முக்கிய இடங்களுக்கான கட்டணங்கள், ரெயில் சேவையின் நேரம், வழித்தடங்கள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.

    அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை மெட்ரோ ரெயில் சேவை குறித்து அறிந்து அதற்கேற்றவாறு பயணத்தை திட்டமிட இது உதவியாக இருக்கும். பயணிகள் பஸ், ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு மெட்ரோ ரெயில் சேவை, அருகில் உள்ள இடங்கள் குறித்து கொள்ள இது உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தென்காசி மாவட்டத்தில் பிசானம் பருவ நெல் மற்றும் ராபி பருவ பயிர்கள் சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
    • பயிர் பருவங்களுக்கு ஏற்ப தொடர்ந்து போதிய உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தென்காசி:

    தென்காசி கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் பிசானம் பருவ நெல் மற்றும் ராபி பருவ பயிர்கள் சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மொத்தம் 29 ஆயிரம் ஹெக்டேர் நெல், 16,085 ஹெக்டேர் சிறுதானியங்கள், 34,700 ஹெக்டேர் பயிர் வகை,3400 ஹெக்டர் பருத்தி, 1000 ஹெக்டேர் கரும்பு, 1960 ஹெக்டேர் எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பல்வேறு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு தேவையான உரங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் போதிய அளவில் தொடர்ந்து கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 192 மெட்ரிக் டன் யூரியா, 1234 மெட்ரிக் டன் டி ஏ பி, 478 மெட்ரிக் டன் பொட்டாஷ், 3905 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 323 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் இருப்பு உள்ளன. இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 315 மெட்ரிக் டன் யூரியாவும்,372 மெட்ரிக் டன் டிஏபி யும்,170 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரமும், 70 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரமும், 767 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு உள்ளன.பயிர் பருவங்களுக்கு ஏற்ப தொடர்ந்து போதிய உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    உர விற்பனையாளர்கள் அனைவரும் விவசாயிகளின் தேவைக்கு போதிய உரங்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். உரங்கள் பதுக்கள் செய்யக்கூடாது, விவசாயம் அல்லாத தேவைகளுக்கு உரங்கள் விற்பனை செய்யக்கூடாது.

    உரம் வாங்கும் விவசாயிகளின் ஆதார் எண் பெற்று விற்பனை முனைய கருவியில் பில் போட்டு மட்டுமே மானியத்தில் வரும் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் அனைத்து உர விற்பனையாளர்களும் தினமும் அன்றைய தினத்தின் ஆரம்ப இருப்பு மற்றும் விற்பனை விலை ஆகியவற்றை கடைக்கு வரும் அனைவருக்கும் தெரியும் படியாக தகவல் பலகையில் எழுதி வைத்திருக்க வேண்டும். உரங்கள் வாங்கும் விவசாயிகளிடம் வேறு பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க செய்யக்கூடாது. மீறினால் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    உரங்கள் இருப்பு விற்பனை மற்றும் விதி மீறல்கள் தொடர்பான புகார் ஏதும் இருப்பின் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633-295430ஐ அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் வேளாண்மை துறை அலுவலர்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×