search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in crowd"

    • வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலா செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் மலைரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மேலும் கூடுதலாக மலை ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அந்தவகையில் வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கட்கிழமை வரை 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில் குன்னூர்-ஊட்டி இடையே காலை 8.20 மணிக்கும், ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.

    இதுதவிர மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும். மேலும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இதே போல ஊட்டி-கேத்தி இடையே வெள்ளி முதல் திங்கள் வரை 4 நாட்களுக்கு காலை 9.45 மணி, காலை 11.30 மணி, மாலை 3 மணி என்ற இடைவெளிகளில் சிறப்பு மலைரெயில்கள் இயக்கப்படும்.

    ஊட்டி-குன்னூர் இடையேயான மலை ரெயிலில் உள்ள 5 பெட்டிகளில் 80 முதல் வகுப்பு, 130 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 210 இருக்கைகள் அமையும். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான 4 ரெயில் பெட்டிகளில் 40 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் இடம்பெற்றிருக்குமென தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • இங்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தற்போது வருகை புரிந்துள்ளனர்.
    • பல்வேறு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தற்போது வருகை புரிந்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரி த்துள்ளதால் பிரதான சாலைகளான அப்ச ர்வேட்டரி சாலை , ஏரிச் சாலை, வத்தலக்குண்டு பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . மேலும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரையில் வாகனங்கள் அணிவகுத்ததால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    மேலும் மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் , தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, உள்ளிட்ட இட ங்களை கண்டு ரசித்தும் சில சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக சுற்று லாப் பகுதிக்கு செல்ல முடியாமல் திணறல் அடை ந்தனர். தொ டர்ந்து கொடைக்கானலுக்கு வந்த சில சுற்றுலா பயணிகள் சுற்றுலா த்தலங்கள் அல்லாத வனப்பகுதிக்குள் சென்று வருகின்றனர் .

    இதனை முறைப்படுத்த வனத்துறை யினர் எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்கவில்லை என்ற குற்ற ச்சாட்டும் எழுந்து ள்ளது. எனவே வனப்பகுதியில் அமை ந்துள்ள சுற்றுலா பகுதி களில் தற்காலிக பணியாள ர்களை நியமித்து க ண்காணிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதலாக போக்குவரத்து காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×