என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "In a sack"
- அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் மொபட்டில் வந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
- கே.என்.பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்களை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர்
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் ராமர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் மொபட்டில் வந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அந்த நபர் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (32) என்பதும் சாக்கு மூட்டையை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து 13.02 கிலோ குட்கா மற்றும் மொபட்டையும் பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்து செல்வம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், இந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கர்நாடகாவில் வாங்கி வந்து உள்ளூர் பகுதியில் மளிகை கடைகளுக்கு விற்பனை செய்து வரும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கே.என்.பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்களை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்