search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Immunization"

    • நல்வாழ்வுத்துறையின் சார்பில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் 5.௦ தொடங்கப்பட்டது.
    • 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் 5.0 கீழ் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுபட்ட தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தின்படி விடுபட்ட மற்றும் பகுதி தடுப்பூசி போடப்படாத 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1897 குழந்தைகள் மற்றும் 305 கர்ப்பிணி பெண்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் சுற்றான ஆகஸ்ட் 7 முதல் 14 வரை தடுப்பூசி வழங்கப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடைபெறும்.

    மேலும் இந்த விபரங்களை யு-வின் என்ற இந்திய அரசின் கணினி மென்பொருள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்த சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜிகிரியப்பனவர் , துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், மாநகர நல அலுவலர் கௌரிசரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×