என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கர்ப்பிணி-குழந்தைகளுக்கு தடுப்பூசி
- நல்வாழ்வுத்துறையின் சார்பில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் 5.௦ தொடங்கப்பட்டது.
- 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் 5.0 கீழ் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுபட்ட தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தின்படி விடுபட்ட மற்றும் பகுதி தடுப்பூசி போடப்படாத 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1897 குழந்தைகள் மற்றும் 305 கர்ப்பிணி பெண்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் சுற்றான ஆகஸ்ட் 7 முதல் 14 வரை தடுப்பூசி வழங்கப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடைபெறும்.
மேலும் இந்த விபரங்களை யு-வின் என்ற இந்திய அரசின் கணினி மென்பொருள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்த சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜிகிரியப்பனவர் , துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், மாநகர நல அலுவலர் கௌரிசரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்