search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "immediate solution"

    • மக்கள் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது
    • ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி லதா தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் நிலங்களை கையகப்படுத்தியது.இதையடுத்து நிலங்களை இழந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமலும் வீடுகள் கட்ட முடியாமல் சில வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களுக்கு அந்தந்த நில உரிமையாளரிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென்று சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் 110 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் அனல் மின் திட்ட தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார். இந்த மக்கள் நீதிமன்றத்தினை ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முத்து கிருஷ்ணன், ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி அரசு வழக்கறிஞர்கள் .மோகன் ராஜ் மற்றும் செந்தில்குமார், மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் முன்னின்று நடத்தினர்.




    பொதுமக்கள் அளிக்கும் மனு மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டு உள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாலசந்திரன் ஆகியோர் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம், தற்போதைய நிலை, குடிநீர் வினியோகம்் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-

    தமிழக அரசு குடிநீர் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்்து வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து, அவற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட வேண்டும். மேலும் அரசு அலுவலர்கள் இப்பணிக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்திட வேண்டும்.

    ஏற்கனவே பயன்படுத்தி வருகின்ற நீர் ஆதாரங்களை மேலும் செம்மைப்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அதிக அளவில் நீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படுகின்ற குடிநீர் அனைத்து பொதுமக்களுக்கும் சரியாக சென்று சேரும் வகையில், உரிய நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் 4,89,213 குடும்பங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் 76,637 நோயாளிகளுக்கு ரூ.163.90 கோடி மதிப்பீட்டில் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 2018 -19-ம் நிதியாண்டில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் ரூ.11.23 கோடி மதிப்பீட்டில் 535 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது.

    2017-2018-ம் நிதியாண்டில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.29.19 கோடி மதிப்பீட்டில் 1,717 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு அலுவலர்களும், பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு உரிய தீர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    ×